தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாபா அருளும் இடம்

Go down

பாபா அருளும் இடம் Empty பாபா அருளும் இடம்

Post  amma Fri Jan 11, 2013 1:01 pm


பாபா அருளும் இடம்

சாயி பாபாவின் உயிர் நீத்த உடலை எப்படி அடக்கம் செய்வது என்பதில் பெரிய பிரச்சினையாகி விட்டது. காரணம் மகான் பாபா அவர்கள், இந்துக்களின் இதயத்திலும், முஸ்லீம்களின் இதயத்திலும் நீங்காத இடம் பிடித்த ஆண்டவனின் தூதுவன் சாயிபாபா அவர்கள்.

முஸ்லீம் பக்தர்கள் சாயிபாபாவை, எங்கள் மத வழக்கப்படி அவரது உடலை திறந்த வெளியிலேயே அடக்கம் செய்து பக்தர்கள் வழிபடும் வகையில் மசூதி அமைக்க வேண்டும் என்பது. இந்து பக்தர்களுக்கோ, மகான் பாபாவின் விருப்பப்படியே பாபா பக்தர்கள் கட்டிய கட்டிடமான பூட்டியின் வாடாவிலே அடக்கம் செய்து வழிபட வேண்டும் என்பது.

இந்துகளுக்கும், முஸ்லீம்களுக்கும் அருள் பாலித்து வாழ்ந்த பாபாவின் உடலை அடக்கம் செய்வதில் ஊரே இரண்டாகப் பிரிந்து பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. கடைசியில் இருசாராரின் வாக்கெடுப்பு நடத்துவது என தீர்மானமாயிற்று. அதனால் கோபர் கானை சேர்ந்த கிராம முன்சீப் வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பு இரவு பகலாக இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு மேல் நடந்தது.

கடைசியில் பாபாவின் எண்ணபடியே, இந்துக்களின் வாக்குகளே அதிகமாக இருந்தது. ஆகையால் பூட்டியின் வாடாவில் அடக்கம் செய்வது என்று தீர்மானித்து இருசாராரும் ஒப்புக் கொண்டனர். மகான் பாபாவின் திருமேனியை பூட்டியின் வாடாவில் உயர்ந்த மேடை கட்டி அதனடியில் நிலவறையில் வைப்பது என்ற முடிவு எடுத்தனர்.

மீண்டும் ஒரு பிரச்சினை உருவெடுத்தது. இந்துமத சம்பிரதாயப்படி ஊர்வலம் செல்வதாப முஸ்லீம்களின் சம்பிரதாயப்படி ஊர்வலம் செல்வதாப என்பது. கடைசியில் முஸ்லீம்களின் சம்பிரதாயப்படி சாயிபாபாவின் பூத உடலை ஒரு மரப்பெட்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்று பூட்டியின் வாடாவை அடைவது என்று ஏகோபித்து இந்துக்களும், முஸ்லீம்களும் தோள்கொடுத்து சவ ஊர்வலம் சென்றனர்.

சாயிபாபவின் உடல் பூட்டியின் வாடாவில் அடைந்தவுடன் மீண்டும் பிரச்சினை தலை தூக்கியது. அடக்கம் செய்யும் போது இந்துக்கள் உடலை அமர்ந்த நிலையில் அடக்கம் செய்ய வேண்டும் என்றனர். முஸ்லீம்கள் படுத்த நிலையில் அடக்கம் செய்ய வேண்டும் என்றனர்.

கடைசியில் சாயிபாபாவின் ஆத்ம, பக்தரான மஹல்சபாபதி இரு சாராரையும் சமாதானப்படுத்தி, தலையை வடக்குப்புறம் சற்று சாய்ந்த நிலையில் வைத்து இருசாராரின் வேண்டுகோளையும் ஒரு சேர நிறைவேற்றி சாயிபாபாவின் உடலை அடக்கம் செய்தார். சாயிபாபாவின் மகிமையை என்னென்று சொல்வது.

பூட்டியின் வாடாவில் அடக்கம் செய்யப்பட்ட மறுவிநாடி மகான் பாபா வாழ்ந்த மசூதி தரை மட்டமாக இடிந்து விழுந்தது. மசூதி விழுந்த அன்று இரவு சாயிபாபாவின் பரம பக்தரான பண்டரி புரத்தில் வசிக்கும் தாஸ்கனு என்பவர் கனவில் தோன்றி "நாக் சஞ்சரித்த மசூதி இடிந்து விழுந்து விட்டது.

இனி தாங்கள் பூட்டியின் வாடாவில் உள்ள மாளிகைக்கு வந்து வழிபாடுக்கான ஏற்பாட்டை செய்யுங்கள்'' என்றார். சாயி பாபா அவர்கள் உயிர் நீத்த முப்பது நாட்களும் முஸ்லீம்களும், இந்துக்களும் ஒன்று சேர்ந்து பஜனை செய்து ஆண்டவனை பிராத்தனை செய்தார்கள்.

சாயி பாபா இறந்த பதினைந்து நாட்களுக்கு முஸ்லீம் பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தி ஏழைகளுக்கு அன்னமிட்டனர். பதினைந்து நாட்களுக்கு அப்பால் உள்ள பதினைந்து நாட்களுக்கு இந்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து கணக்கின்றி கூடிய அனைவருக்கும் உணவு வழங்கி சிறப்பித்தனர்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum