தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிதம்பர ரகசியம்......

Go down

சிதம்பர ரகசியம்...... Empty சிதம்பர ரகசியம்......

Post  meenu Sun Mar 24, 2013 3:12 pm


சிதம்பர ரகசியம் என்றால் ஒன்றுமில்லை என்று அர்த்தம். ப_ஞ்ச பூதங்களுள் ஒன்றான ஆகாய லிங்கமாக இறைவன் அந்தத் தலத்தில் குடி கொண்டிருக்கிறார். ஆகாயம் எப்படி உருவமற்றதோ அதே போல அந்த லிங்கமும் உருவமில்லாமல் இருக்கிறது.

ஊமத்தம் பூ பூஜை.......

எல்லோராலும் ஏற்கப்படாத ஊமத்தம் பூவை தனது பூஜைக்கு உகந்ததாகக் கொள்ளும் கருணைக் கடல் சிவபெருமான். அதிலும் குறிப்பாக ஸ்ரீ அக்னீஸ்வரரை ஊமத்தம் பூ கொண்டு வழிபடுகிறவர்களுக்கு மனக் கவலைகள் தீரும். பில்லி, சூனியங்கள் அகலும், சித்தம் தெளியும்.

எந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்யம்?

ஞாயிறு - சர்க்கரைப் பொங்கல்,
திங்கள் - பால் அல்லது தயிர் அன்னம்,
செவ்வாய் - வெண் பொங்கல்,
புதன் - கதம்ப சாதம்,
வியாழன் - சித்ரான்னம்,
வெள்ளி - பால் பாயசம்,
சனி - புளி சாதம், சிவ பூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம். சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவ பக்தர்களுக்கு உணவு அளிப்பது மிகவும் நல்லது. 108 ருத்ர காயத்ரி ஜெபிப்பது மிகவும் விசேஷம்.

லிங்கத்தில் பிற தெய்வங்கள்........

சிவ லிங்கத்தில் ஆரம்ப நாள்களில் சிவனுடைய முகத்தை மட்டுமே அமைப்பதென்பது கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் வந்தவர்கள் தங்கள் மனதிற்கேற்ப விநாயகர், முருகர் ஆகியோரையும் கூட சிவ லிங்கத்தில் அமைக்கத் தொடங்கிவிட்டனர். திருவானைக்கா கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் உள்ள 108 லிங்கங்களில் ஒரு லிங்கத்தில் விநாயகப் பெருமானையும் ஒரு லிங்கத்தில் முருகப் பெருமானையும் அமைந்திருக்கிறார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum