தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரச்சினைகளை போக்க பாபாவிடம் தீர்வு கேட்கும் முறை

Go down

 பிரச்சினைகளை போக்க பாபாவிடம் தீர்வு கேட்கும் முறை  Empty பிரச்சினைகளை போக்க பாபாவிடம் தீர்வு கேட்கும் முறை

Post  meenu Sun Mar 24, 2013 1:45 pm

யாருக்குத்தான் இந்த உலகில் பிரச்சினை இல்லை. சில பிரச்சினைகள் மட்டும் தீர்க்கப்பட முடியாமல் இருக்கும். பாபாவிடம் தீர்வு கேட்கும் முறை மூலம் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியும். அதற்கான வழி முறை வருமாறு:-

பாபாவை முதலில் மனதுக்குள் தியானம் செய்து கொள்ளவும். புகைப்படம் அல்லது சிறிய சிலையாக இருந்தாலும் எதுவும் இல்லாவிட்டால் பாபாவை மனதில் கொண்டு வந்து மனமுருகி வேண்டி பாபாவின் பாதத்தில் இரண்டு ரூபாய் தட்சணை வைக்கவும்.

கீழே பாபா சொன்ன தீர்வுகளில் முதலில் 25 மட்டும் கொடுத்துள்ளோம். கண்களை மூடி தியானித்தவாறு திறந்து அதில் உங்களின் ஆட்காட்டி விரலை வைத்து அதில் வரும் எண்ணில் உள்ள பதில், பரிகாரத்தைத் தெரிந்து கொள்ளலாம். இன்னொரு முறையிலும் பிரச்சினைகளுக்கு பாபாவிடம் தீர்வு கேட்கலாம்.

அதாவது பாபாவுக்கு உகந்த கொண்டைக் கடலை (மூக்குக்கடலை) ஒரு கைப்பிடி அளவு ஒரு பாத்திரத்தில் எடுத்து பாபாவின் படத்தின் முன்போ அல்லது உருவச்சிலைக்கு முன்போ வைத்து அதிலிருந்து கொஞ்சம் கடலையை ஸ்ரீசாயிநாதரை நினைத்து எடுக்கவும், பிறகு அவற்றை எண்ணிப் பார்த்து அந்த எண்ணிக்கைப்படி உங்களுக்கான பதில், பரிகாரங்கள், தீர்வுகளை கீழே உள்ள 25 பதில்களில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

1. உன் புத்தி சாதுர்யத்தை தள்ளிவிடு, பெருமையும் அகங்காரமும் உனக்கு உதவாது.

2. தெற்கு திசையிலிருந்து வரும் உதவியால் உங்களுக்கு புகழ் கிடைக்கும். தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

3. தாய், தந்தையின் ஆசீர்வாதம் கிடைக்கும். மகிழ்ச்சி பெறுவீர்கள். தொடங்கிய வேலை நன்கு நடைபெறும். 4. சிவனை வணங்குங்கள், உங்கள் பாவங்கள் நீங்கப் பெறும். புண்ணியத்தை அடை வீர்கள்.

5. பந்தங்களிலிருந்து விடுபட ஸ்ரீசாயிநாதரை நினையுங்கள். ஸ்ரீசாயியை நினைத்து 21 நாட்கள் தியானம் செய்தால் பலன் அடைவீர்கள். சிவபெருமானை கனவில் காண்பீர்கள்.

6. இழந்தவைகளைப் பெறுவீர்கள், புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள். மகான்கள் தரிசனம் கிடைக்கும்.

7. பலனை எதிர்பார்க்காமல் புதிய தொழிலைத் தொடங்குங்கள். உங்களின் இஷ்ட தெய்வத்தை வணங்குவதால் உங்கள் பிரச்சினைகள் தீரும்.

8. சட்டப்பூர்வமான முயற்சி எடுத்தால் வெற்றி கிடைக்கும். ஸ்ரீசாய் பாபாவின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள். கோதுமை மாவை தானம் தருவதால் பலன் கிடைக்கும்.

9. நீங்கள் வாழ்க்கையில் சில கஷ்டங்களை சந்திக்க நேரிடும். ஆனால் ஸ்ரீ சாயிநாதரின் ஆசியால் அவைகள் அறவே நீங்கிடும். நீங்கள் மக்களால் பாராட்டப்படுவீர்கள்.

10. வியாதியிலிருந்து விடுபடுவீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கஷ்டங்கள் தீரும். உங்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். 1

1. நீங்கள் சாயிநாதரை சரணடைவதால், நீங்கள் தொடங் கிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். நீங்கள் மனமகிழ்ச்சி அடைவீர்கள். தொழில், தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

12. உங்கள் சுய முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ஆத்ம சக்தி உங்களுக்கு புரியவில்லை. மன உறுதியு டன் முழு முயற்சி செய்யுëங்கள். வெற்றி நிச்சயம்.

13. உங்கள் பழைய முயற்சிகள் இப்பொழுது உங்களுக்கு பலன் தர ஆரம்பிக்கும் நேரமிது. மிகப்பெரிய சாதனைகளை செய்வீர்கள்.

14. நண்பர்களிடம் ஆலோசனைகளைக் கேட்பதால் பலன் அடைவீர்கள். நீங்கள் வெற்றியடைவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனமாயிருங்கள்.

15. தர்மம் செய்வதால், பலனடைவீர்கள். முக்கியமான கடிதம், செய்தி உங்களைத் தேடி வரும். சேமிப்பு பெருகும். புதிய பொருட்கள், சொத்து முதலியன சேரும் நேரம்.

16. மற்றவர்களின் உதவியால் வெற்றியடைவீர்கள். உங்களின் முயற்சி வீண்போகாது. அரிய செயல் செய்வதால் பாராட்டு பெறுவீர்கள்.

17. நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணம் செய்வீர்கள். பயணத்தின் போது உங்களின் முக்கிய பத்திரங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

18. பிரச்சினைகள் உருவாகும். தத்தாத்ரேயரை வழிபட நன்மை உண்டாகும். தைரியமாக இருங்கள். மனம் அமைதி பெறும். நண்பர்களுடன் புனித யாத்திரை செல்வீர்கள்.

19. உங்கள் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சாயிநாமஸ்மரனை செய்யுங்கள். உங்கள் வீட்டில் புதிய குழந்தை பிறக்க இருக்கிறது.

20. உங்களுக்கு ஒரு தெய்வ வாக்கு கிடைக்கும். நீங்கள் வெற்றி பெறுவீர்கள். மகான்களின் ஆசி சிடைக்கும்.

21. உங்கள் வீட்டில் தெய்வ காரியங்கள் நடைபெறும். அதனால் பலன் கிடைக்கும். தெய்வ தரிசனம் மறைமுகமாகக் கிடைக்கும்.

22. தர்க்கங்களையும், வாக்குவாதங்களையும், சந்தேகங்களை யும் தவிர். குருவிடம் சரணடையுங்கள். எல்லாம் சரியாகி விடும்.

23. புதிய திட்டங்கள் போடுவீர்கள். தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது. புதிய பாடம் கற்றுக் கொள்வீர்கள். முடிவில் வெற்றி பெறுவீர்கள்.

24. சாயியை தியானியுங்கள். மனதிலுள்ள கவலைகள் நீங்கும். உங்களுக்கு எதிர்பாராத பெயரும், புகழும் கிடைக்கும்.

25. திட்டமிட்டு தொடர்ந்து செயல்படுங்கள். உங்களுக்கு நல்ல புகழ் கிடைக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும். உடல் உபாதைகள் நீங்கும்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum