சோனா மிரட்டல், கோபத்தில் வெங்கட் பிரபு
Page 1 of 1
சோனா மிரட்டல், கோபத்தில் வெங்கட் பிரபு
மங்காத்தா பட வெற்றியை கொண்டாடும் வகையில் நடைபெற்ற மது விருந்தில் நடிகை சோனா பங்கேற்றதும், அப்போது எஸ்.பி.பி.சரண் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பரபரப்பு புகார் கூறி, அதற்காக சரண் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார் சோனா. சரணுக்கு கண்டிப்பாக தண்டனை வாங்கி தருவேன் என்று கூறியவர் அடுத்த சில நாட்களிலேயே வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு, மன நிம்மதிக்காக வெளிநாடு செல்வதாக கூறி பறந்துவிட்டார்.
இந்நிலையில் நடிகை சோனாவுக்கு இனிமேல் படம் இயக்கப் போவதில்லை என்று முடிவெடுத்த வெங்கட்பிரபு, சோனாவிடம் வாங்கிய அட்வான்சை திருப்பி தருவதாக உறுதியளித்தார். ஆனால் சொன்னபடி வெங்கட்பிரபு முழு பணத்தையும் செட்டில் செய்யவில்லையாம். ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தை வெங்கட்பிரபுதான் இயக்கவிருக்கிறார். அதனால் சோனா யாரையும் தொடர்பு கொள்ளாமல், ஞானவேல்ராஜாவையே தொடர்பு கொண்டாராம்.
ஒரு தயாரிப்பாளரோட கஷ்டம் இன்னொரு தயாரிப்பாளருக்கு தெரியும். எனக்கு தர வேண்டிய அட்வான்ஸ் தொகையை வட்டியோடு திருப்பி கொடுக்க சொல்லிவிட்டு உங்கள் படத்தை அப்புறம் ஆரம்பிங்க. இல்லையென்றால் நீங்கள் படத்தை ஆரம்பிக்கும் முன்பே நான் சங்கங்களில் புகார் செய்வேன். அது உங்களுக்குதான் கெட்ட பெயர். இதை வெங்கடபிரபுவிடம் சொல்லுங்க என்று கூறினாராம் சோனா. இதை கேட்டதும் சற்று கோபத்தில் உள்ளாராம் வெங்கட்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெங்கட் பிரபு கூட்டணியில் சூர்யா!
» ‘மொட்டை போட்ட’ வெங்கட் பிரபு!
» மங்காத்தா சீரியஸ் த்ரில்லர்! – வெங்கட் பிரபு
» வெங்கட் பிரபு இயக்கத்தில், சூர்யா நடிக்க உள்ளார்
» அக்டோபர் 20-ல் தொடங்குகிறது மங்காத்தா படப்பிடிப்பு: வெங்கட் பிரபு
» ‘மொட்டை போட்ட’ வெங்கட் பிரபு!
» மங்காத்தா சீரியஸ் த்ரில்லர்! – வெங்கட் பிரபு
» வெங்கட் பிரபு இயக்கத்தில், சூர்யா நடிக்க உள்ளார்
» அக்டோபர் 20-ல் தொடங்குகிறது மங்காத்தா படப்பிடிப்பு: வெங்கட் பிரபு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum