தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலா சார் பட வாய்ப்பு என்றால் சம்பளம்கூட வேண்டாம்: ஒளிப்பதிவாளர் ஏ.வி.வசந்த்

Go down

பாலா சார் பட வாய்ப்பு என்றால் சம்பளம்கூட வேண்டாம்: ஒளிப்பதிவாளர் ஏ.வி.வசந்த் Empty பாலா சார் பட வாய்ப்பு என்றால் சம்பளம்கூட வேண்டாம்: ஒளிப்பதிவாளர் ஏ.வி.வசந்த்

Post  ishwarya Sat Mar 23, 2013 12:11 pm



பாலா படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் நாள் அன்றுதான், தன் கலையுலக வாழ்வு முழுமை அடையும் என்றார் ஒளிப்பதிவாளர் ஏ.வி.வசந்த். இவர் அண்மையில் வெளியான "கள்ளத் துப்பாக்கி' படத்தின் ஒளிப்பதிவாளர்.

திருநெல்வேலிக்காரரான இவர். ஒளிப்பதிவு மோகத்தால் கிறங்கிக் கிடந்தவர். சந்தோஷ் சிவன், பி.சி.ஸ்ரீராம், ரத்னவேலு போன்றவர்களின் ஒளிப்பதிவில் மெய் மறந்தவர்.

இந்த ஆர்வத்தில் சென்னையில் தங்கி சூளைமேட்டில் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். தமிழ்நாட்டிலேயே சென்னை சூளைமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மட்டும்தான் மேல் நிலை அதாவது ஹையர் செகண்டரி வகுப்பில் போட்டோகிராபி பிரிவு உள்ளது. இதில் சேர்ந்து படித்தால் திரைப்படக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் படித்தார் வசந்த்.

12ஆம் வகுப்பு முடித்ததும் தரமணி திரைப்படக் கல்லூரியில் பதினிடுதல் பிராசசிங் பிரிவில்தான் இடம் கிடைத்தது.

“என்னுடன் படித்த மனுஷ்நந்தன் நண்பனானதால் இவர் வீட்டிலேயே தங்கிப் படித்தேன். என் நண்பணின் தந்தைதான் எழுத்தாளர் ஞானி. இவர் நடத்திய 'பரீக்ஷா' நாடகக் குழுவிலும் சேர்ந்து நடித்தேன். அவர் மூலம் என் கலையறிவு விசாலமானதை உணர்ந்தேன். பிராசசிங் துறையில் படிப்பு பெற்றாலும் என் கவனம் ஒளிப்பதிவுத்துறையிலும் இருந்தது. ஒளிப்பதிவு வகுப்புகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடுவேன். ஒளிப்பதிவு மாணவர்களுடன் நட்புடன் பேசிப் பழகி நிறைய கற்றுக் கொண்டேன். மானசீகமாக ஒளிப்பதிவு மாணவனாக இருந்தேன்.

பிலிம் இன்ஸ்டிடியூட் படிப்பு முடிந்ததும் நேரே கே.வி.ஆனந்த் சாரைப் பார்த்தேன் உதவியாளராக வாய்ப்பு கேட்டேன். அப்போது அவர் படம் இயக்கும் திட்டத்தில் இருந்தார். எனவே அவர் மூலம் ஒளிப்பதிவாளரான சௌந்தர்ராஜன் சாரிடம் சேர்ந்தேன். என்னை அன்போடு அரவணைத்து உதவியாளனாக்கிக் கொண்டார். சௌந்தர்ராஜன் சாரிடம் வேறு ஒரு உலகத்தில் இருப்பதைப் போல உணர்ந்தேன். செயல்வழியே நிறையவே கற்றுக் கொடுத்தார். படிப்பறிவு வேறு செயல்முறை அனுபவம் வேறு என்பது புரிந்தது.

நான் முதலில் உதவியாளராகி வேலை பார்த்த 'ஆதி' அதன்பின் 'அறை எண் 305ல் கடவுள்' தவிர 150 விளம்பரப் படங்களுக்கும் என் குருநாதருடன் இணைந்து பணியாற்றினேன்.

பிறகு 'பட்டியல்','சிவாஜி'.'பில்லா', போன்ற படங்களுக்கு க்ளாஷ் ஒர்க் செய்திருக்கிறேன். உதவி கேமராமேனாக 'முத்திரை','மன்மதன் அம்பு' படங்களில் உதவியாளராக செகண்ட் யூனிட் கேமரா மேனாக பணியாற்றியுள்ளேன்” என்றார் வசந்த்.

திரைப்பட உதவி ஒளிப்பதிவு அனுபவங்களுடன் நாளைய இயக்குநர் சீசன் 3 மற்றும் சில குறும்படங்கள் விளம்பரப் படங்கள் எப்போதும் வீடியோ கவரேஜ் என்று எப்போதும் தன் கைப்பிள்ளை போல கேமராவை கைவிடாமல் தொடர்ந்து இயக்கியே வந்திருக்கிறார் வசந்த்.

திரைப்படக் கல்லூரி அனுபவம், ஒளிப்பதிவு உதவியாளராக அனுபவம்,ரஜினி,கமல்,விஜய்,அஜித் போன்ற நட்சத்திரங்களுடன் பணியாற்றிய பெருமை என இத்தனையும் இருந்தும் நல்லதொரு தனியான வாய்ப்புக்காகக் காத்திருந்த வசந்துக்கு ஒளிப்பதிவாளர் என்கிற பதவி உயர்வு 'கள்ளத் துப்பாக்கி' படம் மூலம் கிடைத்துள்ளது.

'கள்ளத் துப்பாக்கி' யின் டைரக்டர் லோகியாஸ் தயாரிப்பாளர் ரவிதேவன் இருவரும் நல்லதொரு திட்டத்துடன் இருந்தனர். இந்தப் படத்தை முழுதாக ஒத்திகை பார்த்துவிட்டு அதன்பிறகே எடுப்பது என்கிற தெளிவாக இருந்தனர். அதனால் படத்தின் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் EX3 கேமரா மூலம் முதலில் ரிகர்சலுக்காக எடுத்தோம். பிறகு அதே காட்சிகளை அதே இடத்தில் ரெட் 1 கேமரா மூலம் எடுத்து படமாக்கினோம்.

படத்தில் நடித்தவர்கள் 5 பேரும் புதியவர்கள். எனவே எல்லாமே சொல்லிக் கொடுத்து சரியாக வந்த பின்புதான் எடுத்தோம் என்கிறார்.

எல்லா ஒளிப்பதிவாளர்களையும் பிடிக்கும் என்கிற இவர்., சந்தோஷ் சிவனின் ஒளியமைப்பில் மனம் லயிப்பாராம். அழகற்றவரைக் கூட அழகாக காட்டுவது அவர் பாணி. அது தனக்கும் பிடிக்கும் என்கிறார். பி.சி.ஸ்ரீராம்,ரத்னவேலு,அர்தர் வில்சன்,ஆர்.டி.ராஜசேகர் என்று தொடர்ந்து 'கும்கி' சுகுமார் வரை தன்னைக் கவர்ந்தவர்கள் பலர் உண்டு ' என்கிறார்.

'ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம் நான் இப்போது 'ஈகோ' என்கிற படத்தில் பணியாற்றி வருகிறேன். 'கந்தக்கோட்டை' சக்திவேல் இயக்கும் படம்தான் 'ஈகோ'

நான் பாலா சார் படத்தில் பணியாற்ற மிக மிக கனவுடன் இருக்கிறேன். பாறாங்கல்லில் சிற்பத்தைக் கண்டு பிடிப்பவர் அவர். பாலா சார் படங்களில் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கும். அவர் படத்தில் பணிபுரிவது என் கனவு அதை நான் அடைந்தே தீருவேன். அவர் படத்தில் பணியாற்றிய பின்பே நான் முழுமை அடைவேன். அவர் பட வாய்ப்பு என்றால் சம்பளம் கூட வேண்டாம் அனுபவம் போதும் என்கிறார் ஒளிப்பதிவாளர் வசந்த். இந்தக் கனவை அடைய தினம்தோறும் கற்றுக் கொண்டும் இருக்கிறார். கனவு மெய்ப்பட வாழ்த்தலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum