தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தணிக்கைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு படம் வெளிவராமல் எப்படித் தடுக்கலாம்: பாரதிராஜா கேள்வி

Go down

தணிக்கைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு படம் வெளிவராமல் எப்படித் தடுக்கலாம்: பாரதிராஜா கேள்வி Empty தணிக்கைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு படம் வெளிவராமல் எப்படித் தடுக்கலாம்: பாரதிராஜா கேள்வி

Post  ishwarya Sat Mar 23, 2013 12:07 pm

தணிக்கைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் வெளி வராமலேயே எப்படித் தடுக்கலாம் என்றார் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா.

திருவாருரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மனித உரிமைகள் கழக சர்வதேச அமை ப்பின் 12-வது தேசிய மாநாட்டில் மேலும் அவர் பேசியது:

பொய்ப்பேசத் தெரியாததால் பாரதிராஜாவால் அரசியலுக்கு வரமுடியவில்லை. உணர் ச்சியை வெளிப்படுத்தாதால், கோபத்தை காண்பிக்காததால் சிறந்த கலைஞனாக இருக் கிறேன். யார்ப் பொதுவாழ்வுக்கு வந்தாலும் இறுதி வாழ்க்கை அரசியல் தான். முனை ப்பும் போராட்ட வாழ்க்கை தான் மனித நேயம். ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பிலே போராட்டம் தொடங்குகிறது. ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகள் இருந்தால் அண்ண ன், தம்பியாக இருந்தாலும் முக விலாசத்தை காட்ட போராட வேண்டியுள்ளது.

பொது வாழ்வுக்கு வந்து அரசியலில் கால்பதித்த பலர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு அதில் அமர்ந்தனர். ஆனால் பெரியாரோ இதில் விதிவிலக்கானவர். நாற்காலிக்கு ஆசைப் படாதவர். ஒருவர் பொது வாழ்வுக்கு வந்து நாம் தான் அந்த இடத்தில் நின்று ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்று நினைக்கும் போது அரசியலுக்கு வந்து விடுகிறார்.

கட்-அவுட் எனக்குப் பிடிகாத ஒன்று. உலகத்தில் தமிழகத்தில் தான் கட்அவுட் கலாச் சாரம் அதிகரித்துள்ளது. மனித உரிமைக் கழகத்தில் இணைந்துள்ளவர்கள், பொது வாழ்வுக்கு வரும் போது கட்அவுட் தேவையா என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும். உங்கள் சக்திகளை வீணடித்துவிடாதீர்கள்.

தில்லியில் ஒரு மாணவி பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செ ய்யப்பட்டார். இதற்காக இந்தியா முழுவதும் கண்டன குரல் எழுந்தது. ஆனால் ஈழத் தில் லட்சக்கணக்கான தமிழர்கள் சித்ரவதைப்படுத்து கொலை செய்யப்பட்டார்கள், பெ ண்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைப்படுத்தி பாலியல் பலாத்கா ரம் செய்து கொலை செய்யப்பட்டார்கள். இதைக் கண்டித்து குரல் கொடுக்க தமிழக த்தில் சிலரை தவிர பலர் முன்வரவில்லை.

மனித உரிமைகள் கழகம் கூட அப்போது குரல் கொடுக்கவில்லை. ஈழத் தமிழர்கள் பிரச்னையில் மனித உரிமைக் கழகம் ஓங்கி ஒலித்திருக்க வேண்டும். கட்சி, அரசியல் இல்லாமல் மனித உரிமைக் கழகம் போராட வேண்டும்.

இனித் தமிழர்களுக்கு ஏதேனும் ஒன்று நிகழ்ந்தால் கடுமையான குரல் கொடுக்கவே ண்டும். அரசு மக்கள் பிரச் னைகளுக்கு முன்னெடுக்காவிட்டால் 2016-ல் அரசியலில் கவனம் செலுத்தப்படும் எனக் கூறப்பட்டது. அரசியல் இயக்கமாக மாறும் வரை மக் களுக்கு செய்யப் போவது என்ன.

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தணிக்கைக்குழு அங்கீகரித்து, ஐஎஸ்ஐ முத்திரை வழங்கி அனுமதித்த ஒரு திரைப்படம் வெளிவராமலேயே எப்படித் தடுக்கலாம். 100 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படம் குறித்து மக்கள் தான் சொல்ல வேண் டும். கலாச்சாரப் பயங்கரவாதம் நடைபெறுகிறது. மக்களுக்கு பயனுள்ள விசயத்தில் மனித உரிமைக் கழகத்தினர் போராடுங்கள் என்றார் பாரதிராஜா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum