திருவிழாக்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருவிழாக்கள்
திருவிழாக்கள்
ராமேஸ்வரம் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள் பலவாகும். அவற்றுள் ஆனி, ஆடி, மாசி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள், மிகவும் சிறப்பாக நடைபெறும் பெரிய திருவிழாக்களாகும். வைகாசி மாதத்தில் வசந்த விழா நடைபெறுகின்றது. இவ்விழாவின் போது ஒவ்வொரு நாளும் சுவாமியும் அம்பிகையும் அலங்காரங்களோடு எழுந்தருளி, மூன்றாவது பிரகாரத்திலுள்ள மாதவ தீர்த்தம் என்னும் பெரிய குளத்தின் கரையில் உலாவரும் காட்சி நடைபெறும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் அம்பிகை நவசக்தி மண்டபத்தில் கொலு வீற்றிருப்பாள். அப்போது அம்பாளுக்கு பலவித வழிபாடு நடைபெறும். அந்த பூசை வழிபாடுகளை ஏற்று அருள்கின்றாள். அதன் பின்னர் வேதங்களும், தேவார திருவாசகத் தீந்தமிழ்ப்பாசுரங்களும் முழங்க, தங்கப் பல்லக்கில் எழுந்தருளித் பிரகாரத்தில் உலா வருவாள்.
பொதுவாக இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி வசந்த விழாவும், ஆனி-ராமலிங்கப் பிரதிஷ்டை விழாவும், ஆடி-திருக்கல்யாண விழாவும், புரட்டாசி-நவராத்திரி விழாவும், மார்கழி- ஆருத்திரா தரிசன விழாவும், மாசி-சிவராத்திரி விழாவும், கந்தர் சஷ்டி விழாவும் குறிப்பிடத்தக்க பெரும் சிறப்புடைய திருவிழாக்களாகும்.
இவ்விழாக்களுள் ஆனி, ஆடி, மாசி மாதங்களில் நிகழும் திருவிழாக்கள் மிகவும் விசேஷமான பெருவிழாக்களாகும். ஆனி, ஆடி, மாசி ஆகிய மூன்று மாதங்களிலும் இத்திருக்கோவிலில் நடைபெறுகின்ற மூன்று திருவிழாக்களும், முப்பெரும் விழாக்களாக அமைந்து விளங்குகின்றன.
ஒவ்வொரு மாதமும் பிரதோஷ நாள்தோறும், மாலை ஆறு மணியளவில் சுவாமி தங்க இடப வாகனத்தில் எழுந்தருளி, மூன் றாம் பிரகாரத்தில் உலா வருவார். சமீப காலமாக இந்த பிரதோஷ நாட்களில் கோவிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை நாளில், இரவு எட்டு மணியளவில், சுப்பிரமணியசுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வருவார். இவ்விழா `கார்த்திகை விழா' என்று சொல்லப்படுகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள், அம்பிகை தங்கப் பல்லக்கில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் உலாவரும் தெய்வீக காட்சி நடைபெற்று வருகின்றது.
தை மாதம் பொங்கல் நாள், சித்திரை மாதம் முதல் தேதியாகிய தமிழ் புத்தாண்டு பிறப்பு நாள், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாள், தை மாதம் பவுர்ணமியில் பூச நட்சத்திர நாள் ஆகிய நாட்களில் விசேஷத் திருவிழாக்கள் இத்திருக் கோவிலில் நடைபெறுகின்றன.
இவ்விழா நாட்களில் சுவாமியும், அம்பிகையும் தங்க இடப வாகனத்தில் அமர்ந்து, பஞ்சமூர்த்திகள் சூழப் புறப்பட்டுக் காட்சி கொடுத்தருளுகின்றனர். தெப்பத் திருவிழாவன்று சுவாமியும், அம்பிகையும் தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். தெப்பத்திருவிழா, கோவிலுக்கு மேற்கிலுள்ள லட்சுமண தீர்த்தத்தில் நடத்தப்பட்டு வருகின்றது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum