தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி?

Go down

பஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி? Empty பஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி?

Post  meenu Fri Mar 22, 2013 4:58 pm

பஞ்சகவ்யா இயற்கை உரமாகவும், பயிர்களுக்கு பூச்சி எதிர்ப்பு திறன் தருவது மட்டுமில்லாமல், விதை நேர்த்திக்கும் பயன் படுத்தலாம்.

பஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி என்பதை ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை விவசாய பண்ணை பயிற்சி இயக்குனர் ஜெயராமன் விளக்குகிறார்:

ஏக்கருக்கு தேவையான விதை நெல்லை தெளிப்புக்கு முன் நூறு லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவை கலந்து விதை நெல்லை சாக்குடன் போட்டு 12 மணி நேரம் ஊரவைக்க வேண்டும்.
பின் விதை நெல்லை எடுத்து சாக்குப்போட்டு மூடி வைத்து 12 மணி நேரத்துக்குப்பின் 15 லிட்டர் தண்ணீர் 50 மில்லி பஞ்சகாவ்யவை ஊற்றி, கலக்கி விதை நெல்மூட்டை முழுவதும் ஊற்றி சாக்கு போட்டு இருக்கமாக மூடிவைக்க வேண்டும்.
பத்து மணி நேரத்துக்குப்பின் விதையை பார்த்தால் அனைத்து விதைகளும் பூண்டு முளைத்து வெள்ளி கம்பி போல் இருக்கும்.
அதன் பின் விதையை தெளித்து விடவேண்டும்.
செம்மை நெல் சாகுபடியில் குறுகிய கால பயிராக இருந்தால் பத்து நாட்களிலும், மத்திய கால பயிராக இருந்தால் 14 நாட்களிலும், நீண்ட கால பயிராக இருந்தால் 16 நாட்களிலும் நடவு செய்ய வேண்டும்.
சாகுபடியில் முதல் நிலை விதை நேர்த்தி மிகமுக்கியம். விதை நேர்த்தி செய்வதன் மூலம் பழுது இல்லாமல் விதை முளைக்கும்.
நோய் தாக்குதலை விதையிலேயே தடுக்க முடியும். பயிர் செழிப்பாக வளர ஊட்டச்சத்தாகும். எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் பூஞ்சானை இயற்கை விவசாய முறையில் எளிமையாக செய்வதுதான் பஞ்கவ்யா நேர்த்தி.

மேலும் தகவல்களுக்கு கிரியேட் ஜெயராமனிடம் 09443320954 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum