தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உப்புநீர் கரைசல் மூலம் நெல்லின் விதைத்தரம் காண்பது எப்படி?

Go down

உப்புநீர் கரைசல் மூலம் நெல்லின் விதைத்தரம் காண்பது எப்படி? Empty உப்புநீர் கரைசல் மூலம் நெல்லின் விதைத்தரம் காண்பது எப்படி?

Post  meenu Fri Mar 22, 2013 4:49 pm

செய்முறை

முதலில் 15 லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு பிளாஸ்டிக் வாளியில் 10 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதில் ஒரு நல்ல கோழி முட்டையை போடவும் முட்டை நல்ல எடையுடன் இருப்பதால் தண்ணீரில் மூழ்கிவிடுகிறது.
பின்பு உப்பை சிறிது சிறிதாகப் போட்டு கரைக்க வேண்டும் (10 லிட்டர் தண்ணீருக்கு 2 கிலோ உப்பு)
உப்பு கரைந்த நீரின் அடர்த்தி அதிகமாவதால் முட்டை மேலே மிதந்து வருவதைக் காணலாம். முட்டையின் மேற்பகுதி 25 பைசா அளவு தண்ணீரின் மேல்தெரியும் போது தண்ணீரின் அடர்த்தி விதைத்தரம் பிரிப்பதற்கு ஏற்றதாய் அமைகிறது.
மேற்கண்டவாறு தயாரித்த உப்புக் கரைசலில் முதலில் 10 கிலோ விதையை சிறிது சிறிதாகப் போட வேண்டும்.
எடை குறைந்த நெல் விதைகள் மிதக்கும். அதே சமயம், எடை அதிகமான, தரம் மிகுந்த விதைகள் கரைசலில் மூழ்கும்.
மிதக்கும் விதைகளை முற்றிலும் நீக்கிவிட வேண்டும். மூழ்கிய விதைகளையே விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
மூழ்கிய விதைகளை வெளியே எடுத்து இரண்டு அல்லது மூன்று முறை நீரில் கழுவி விதைகளின் மேல் படர்ந்த உப்பை நீக்கி விடவும்.
விதைகளை கழுவிய பிறகு நிழலில் உலர வைக்க வேண்டும். பிறகு விதைப்புக்குப் பயன்படுத்தலாம்.

பயன்கள்

முற்றாத விதைகள் மற்றும் பொக்கு விதைகளை இம்முறைப்படி பிரித்தெடுக்கலாம்.
வயலில் போதுமான அளவு செடிகளைப் பெற முடியும்.
இதன்மூலம் அதிக விளைச்சலைப் பெற முடிகிறது.
பூஞ்சாண் தாக்கிய விதைகளை விதைப்புக்கு பயன்படுத்துவதிலிருந்து தடுக்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum