தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறுவைப் பயிருக்கு உரமிடும் முறை

Go down

குறுவைப் பயிருக்கு உரமிடும் முறை Empty குறுவைப் பயிருக்கு உரமிடும் முறை

Post  meenu Fri Mar 22, 2013 4:29 pm

குறுவை நெல் பயிருக்கு உரமிடுவது குறித்து வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகணன் விளக்கமளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 38,870 ஹெக்டேரில் குறுவை நெல் பயிரிடப்ப்டடு, தற்போது பயிர் தூர்கட்டும் பருவத்தில் மேலுரம் இடும் தருவாயில் உள்ளது.
மேலும், இதுவரையில் 3,353 ஹெக்டேரில் நாற்றங்கால் அமைக்கப்பட்டு விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.
குறுவைப் பருவத்துக்கு மேலுரம் இடும் போது முதல் மேலுரம் நடவு செய்த 15-ம் நாள் 28 கிலோ யூரியா இட வேண்டும்.
2-வது மேலுரம் பஞ்சு கட்டும் தருணத்தில் 28 கிலோ யூரியாவுடன் 17 கிலோ பொட்டாஷ் சேர்த்து இடலாம்.
மூன்றாவதாக நடவு செய்த 45-ம் நாள் 28 கிலோ யூரியா இட பரிந்துரை செய்யப்படுகிறது.
பொட்டாஷ் உரம் மேலுரமாக இட முடியாத சூழ்நிலையில் கீழ்காணும் முறையில் பொட்டாஷ் சத்தை பயிருக்கு அளிக்கலாம்.
மண்ணில் உள்ள பொட்டாஷ் உரத்தை கரைத்து பயிருக்கு அளிக்கும் பாக்டீரியாவை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் 25 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து இடலாம்.
இந்த பாக்டீரியாவை யூரியா போன்ற ரசாயன உரங்களுடன் கலந்து இடக் கூடாது.
மல்டி கே என்ற உரத்தை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்,

மேற்காணும் முறைகளைப் பின்பற்றி பயிருக்கு சாம்பல் சத்தை அளிக்கலாம் என மயில்வாகணன் தெரிவித்துள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum