புண்ணியத்தை தேடுங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
புண்ணியத்தை தேடுங்கள்
புண்ணியத்தை தேடுங்கள்
தமிழ்நாட்டில் நீங்கள் எத்தனையோ புண்ணிய தலங்களுக்கு சென்று வந்து இருப்பீர்கள். ஆனால் சில தலங்களில் மட்டுமே உங்களுக்கு ஆத்மார்த்தமான அமைதி கிடைக்கும். அதிலும் குறிப்பாக சில குறுப்பிட்ட தலங்களில்தான் கடவுள் அருளின் அலை அதிர்வுகளை உணர முடியும். அத்தகைய தலங்களில் நீங்கள் மனம் ஒன்றி வழிப்பட்டால் நினைத்தது நடக்கும். அது மட்டுமல்ல...
புண்ணியங்கள் சேர்ந்து முக்தி கிடைக்கும். இத்தகைய தலங்களில் தனித்துவம் கொண்டது ராமேசுவரம். ஆனால் ஏனோ தெரியவில்லை, தமிழ்நாட்டு பக்தர்களில் பலர் ராமேசுவரத்துக்கு தல யாத்திரை செல்வதை வழக்கத்தில் கொள்ளாமல் உள்ளனர். அவர்களுள் பலர் ராமேசுவரம் தலத்தின் மகத்துவ பின்புலத்தை கூட தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள்.
இந்த தலம் முழுக்க, முழுக்க ராமபிரானுடன் தொடர்பு உடையது. சிவ-வைணவ ஒற்றுமைக்கு மூல ஆதரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் வேறு எந்த ஆலயத்துக்கும் இந்த சிறப்பு இல்லை. ராமபிரான் தன் தோஷம் நீக்கி கொண்டது இத்தலத்தில்தான். அவர் வழியில் எத்தனையோ அவதாரங்கள், அவதார புருஷர்கள், மகான்கள், ஆன்மீக பெரியவர்கள் இத்தலத்தில் காலடி எடுத்து வைத்து தனுஷ்கோடி, அக்னி கடல்கள் உள்ளிட்ட எல்லா தீர்த்தங்களிலும் நீராடி தங்கள் பாவங்களை போக்கி முக்தி பெற்றுள்ளனர்.
அந்த வகையில் பார்த்தால், நம் பாவங்களை போக்கி, புண்ணியத்தை தேடி கொள்ளும் கண்கண்ட தலமாக ராமேசுவரம் உள்ளது. இது உலகில் எந்த நாட்டு மக்களுக்கும் கிடைக்காத பாக்கியம். தமிழர்களாகிய நமக்கு இந்த பாக்கியமும், வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி கொண்டால் பிறவி பிணிகளை விரட்டி நாம் முக்தி பெற வழி உண்டாகும்.
வட மாநில மக்கள் இந்த உண்மையை நன்கு உணர்ந்து இருப்பதால்தான் ராமேசுவரம் தலத்துக்கு எப்படியாவது வாழ்நாளில் ஒரு தடவையாவது யாத்திரை வந்து விடுகிறார்கள். அப்படி இருக்கும் போது தமிழர்களாகிய நாம் ராமேசுவரம் தலத்துக்கு செல்லாமல் இருக்கலாமாப தை, ஆடி, மாகாளய அமாவாசை நாட்களில் தீர்த்தங்களில் நீராடுவதும் பித்ரு தர்ப்பணம் செய்வதும் மிகவும் நல்லது என்பார்கள்.
ஆனால் ராமேசுவரம் தலத்தில் தீர்த்தங்களில் நீராடி வழிபட நாள், நட்சத்திரம், நேரம் எதுவும் பார்க்க வேண்டியதே இல்லை. நீங்கள் விரும்பும் நேரத்தில் ராமேசுவரம் சென்று வழிபடலாம். இது இத்தலத்துக்கே உரிய முதன்மையான சிறப்பாகும். எனவே இனியும் காத்து இருக்காதீர்கள். ராமேசுவரம் சென்று தீர்த்தங்களில் நீராடி பலன் பெறுங்கள்
தமிழ்நாட்டில் நீங்கள் எத்தனையோ புண்ணிய தலங்களுக்கு சென்று வந்து இருப்பீர்கள். ஆனால் சில தலங்களில் மட்டுமே உங்களுக்கு ஆத்மார்த்தமான அமைதி கிடைக்கும். அதிலும் குறிப்பாக சில குறுப்பிட்ட தலங்களில்தான் கடவுள் அருளின் அலை அதிர்வுகளை உணர முடியும். அத்தகைய தலங்களில் நீங்கள் மனம் ஒன்றி வழிப்பட்டால் நினைத்தது நடக்கும். அது மட்டுமல்ல...
புண்ணியங்கள் சேர்ந்து முக்தி கிடைக்கும். இத்தகைய தலங்களில் தனித்துவம் கொண்டது ராமேசுவரம். ஆனால் ஏனோ தெரியவில்லை, தமிழ்நாட்டு பக்தர்களில் பலர் ராமேசுவரத்துக்கு தல யாத்திரை செல்வதை வழக்கத்தில் கொள்ளாமல் உள்ளனர். அவர்களுள் பலர் ராமேசுவரம் தலத்தின் மகத்துவ பின்புலத்தை கூட தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள்.
இந்த தலம் முழுக்க, முழுக்க ராமபிரானுடன் தொடர்பு உடையது. சிவ-வைணவ ஒற்றுமைக்கு மூல ஆதரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் வேறு எந்த ஆலயத்துக்கும் இந்த சிறப்பு இல்லை. ராமபிரான் தன் தோஷம் நீக்கி கொண்டது இத்தலத்தில்தான். அவர் வழியில் எத்தனையோ அவதாரங்கள், அவதார புருஷர்கள், மகான்கள், ஆன்மீக பெரியவர்கள் இத்தலத்தில் காலடி எடுத்து வைத்து தனுஷ்கோடி, அக்னி கடல்கள் உள்ளிட்ட எல்லா தீர்த்தங்களிலும் நீராடி தங்கள் பாவங்களை போக்கி முக்தி பெற்றுள்ளனர்.
அந்த வகையில் பார்த்தால், நம் பாவங்களை போக்கி, புண்ணியத்தை தேடி கொள்ளும் கண்கண்ட தலமாக ராமேசுவரம் உள்ளது. இது உலகில் எந்த நாட்டு மக்களுக்கும் கிடைக்காத பாக்கியம். தமிழர்களாகிய நமக்கு இந்த பாக்கியமும், வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி கொண்டால் பிறவி பிணிகளை விரட்டி நாம் முக்தி பெற வழி உண்டாகும்.
வட மாநில மக்கள் இந்த உண்மையை நன்கு உணர்ந்து இருப்பதால்தான் ராமேசுவரம் தலத்துக்கு எப்படியாவது வாழ்நாளில் ஒரு தடவையாவது யாத்திரை வந்து விடுகிறார்கள். அப்படி இருக்கும் போது தமிழர்களாகிய நாம் ராமேசுவரம் தலத்துக்கு செல்லாமல் இருக்கலாமாப தை, ஆடி, மாகாளய அமாவாசை நாட்களில் தீர்த்தங்களில் நீராடுவதும் பித்ரு தர்ப்பணம் செய்வதும் மிகவும் நல்லது என்பார்கள்.
ஆனால் ராமேசுவரம் தலத்தில் தீர்த்தங்களில் நீராடி வழிபட நாள், நட்சத்திரம், நேரம் எதுவும் பார்க்க வேண்டியதே இல்லை. நீங்கள் விரும்பும் நேரத்தில் ராமேசுவரம் சென்று வழிபடலாம். இது இத்தலத்துக்கே உரிய முதன்மையான சிறப்பாகும். எனவே இனியும் காத்து இருக்காதீர்கள். ராமேசுவரம் சென்று தீர்த்தங்களில் நீராடி பலன் பெறுங்கள்
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum