தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திடீ‌ர் த‌ற்கொலை முடிவு எதனா‌ல் வரு‌கிறது?

Go down

திடீ‌ர் த‌ற்கொலை முடிவு எதனா‌ல் வரு‌கிறது?    Empty திடீ‌ர் த‌ற்கொலை முடிவு எதனா‌ல் வரு‌கிறது?

Post  amma Thu Jan 17, 2013 11:19 pm




தற்கொலை? நாம் எதிர்பாரதவர்களெல்லாம் திடீரென்று தற்கொலை செய்து கொள்கிறார்கள். பொதுவாக தற்கொலையை மனித மனம் எதிர்க்கத்தான் செய்கிறது. இருந்தாலும், திடமான மனநிலை உள்ளவர்கள் கூட, இந்த தற்கொலைக்கு தள்ளப்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றதென்றால் அது ஜாதக ரீதியான நிலையா?

ஒரு குடும்பம் வந்திருந்தார்கள். எல்லோருக்கும் சனி நடக்கிறது. ஏழரை சனி, அஷ்டமத்துச் சனி, சனி திசை, ராகு திசையில் சனி புத்தி என்று எல்லோருக்கும் மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது. கொடுத்த இடத்தில் இருந்து காசு எதுவும் கைக்கு வரவில்லை. இவர்கள் தரவேண்டியதிலும் பல விதமான நெருக்கடிகள். அவமானங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள். அந்தச் சூழ்நிலையில் குடும்பத்தோடு எல்லோருமே விஷம் குடித்துவிட்டு இறந்துவிடலாம். ஏனென்றால், நாம் மட்டும் இறந்துவிட்டால் பிள்ளைகள் மட்டும் அனாதையாக நிற்பார்கள். எனவே, பிள்ளைகளுக்கு முதலில் விஷம் கொடுத்துவிட்டு அவர்கள் இறந்துவிட்ட பிறகு நாம் இறந்துவிடலாம் என்றெல்லாம் ஆலோசித்துவிட்டு பிறகு என்னிடம் வந்திருந்தார்கள்.

அவர்களுக்குச் சொன்னேன், கிரக நிலைகள் தொடர்ந்து அப்படியே இருக்காது. அடுத்தடுத்து மாறக்கூடியது. முதலில் இருக்கிற இடத்தில் இருந்து இடம் மாறுங்கள். மாறிய பிறகு சில மாற்றங்கள். செல்வம், படிப்பு என்று பழையதையே நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். சாதாரணமாக ஒரு கூலித் தொழில் செய்துகொண்டு பிழைப்பதற்கான வழியை முதலில் பாருங்கள். இதுபோன்று அடிமைப்படும்போதும், அசிங்கப்படும்போது சனியினுடைய எதிர்விசை போய்விடும். அடிமைப்படுதல், அசிங்கப்படுதல் இருந்தாலே உடனே சனி பகவான் ஆயுளைக் காப்பாற்றுவார். ஏனென்றால் சனிதான் ஆயுளுக்கான கிரகம்.

தற்பொழுது அவர்கள் வேறு மாநிலத்திற்கு மாறி கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகிறது. இந்த 4 மாதங்களில் அவர்கள் ஓரளவு தன்னிறைவு அடைந்திருக்கிறார்கள். 3 பிள்ளைகளுக்கும், உணவு, உடை என்று வாழ்ந்துவந்த நிலையில், அடுத்த மாற்றமாக வேறு ஒரு பெரிய வேலை கிடைத்திருக்கிறது. கடன்காரர்களைக் கண்டுபிடித்து பாதி வட்டி கொடுப்பது என்று போய்க் கொண்டிருக்கிறது.

இதுபோல கிரகங்கள் ஒரு சில நேரங்களில் சில நெருக்கடிகளைக் கொடுக்கும். இனிமேல் இருக்க வேண்டுமா? மாய்த்துக் கொள்ளலாமே? என்று தோன்றும். இந்த மாதிரியான நேரங்களில் இடமாற்றம் என்பது பெரிய தீர்வாக இருக்கும். அதைத்தான் உடனே செய்ய வேண்டும். அந்த வீட்டை வெளியேறுவதோ? அந்த ஊரை விட்டு வெளியேறுவது அல்லது அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி வேறொரு மாநிலத்திற்குப் போய்விடுவது என்று செய்யும் போது அவர்களுக்கு சூழ்நிலை மாறுகிறது.

சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு?

என்ன சொந்த வீடு இருக்கிறது. எதுவுமே சொந்தமில்லாத போது அதைப்போய் சொந்த வீடு என்று சொல்வதை விட, அந்த சொந்த வீடுதானே அதிகமான பிரச்சனைகளைக் கொடுக்கிறது. பாதி பேர் எப்படி தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று பார்த்தீர்களென்றால், இந்த வீட்டை விட்டு எப்படி போவது? யாரிடம் ஒப்படைப்பது என்று தெரியவில்லை. வாடகைக்கு விட்டாலும் என்னவாகும் என்று இப்படி குழம்பிப்போய் அதே வீட்டில் இருந்து அழிந்து போவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

ஏறக்குறைய 142 தற்கொலை ஜாதகங்கள் என்னிடம் இருக்கிறது. ஆய்வு நடத்தும்போது, பத்திரிக்கையாளர்களின் நட்புடன் போய் எடுத்தது. இதில் பல காரணங்கள் உண்டு. வறுமையும் உண்டு. ஆனால் கிட்டத்தட்ட 70 பேர் பார்த்தீர்களென்றால் தவறான காதல், தவறான காமம் இதனால் இறந்தவர்கள். 20 பேர் சொத்து பிரச்சனை. அங்காளி, பங்காளி என்று சொல்வார்களே அந்த மாதிரி.

பங்காளி தெரியும். அங்காளி என்றால்?
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» பு‌த்‌தி‌க் கூ‌ர்மை அ‌திக‌ரி‌க்க ‌சில குழ‌ந்தைக‌ள் எ‌ன்னதா‌ன் படி‌த்தாலு‌ம் ‌விர‌ை‌வி‌ல் மற‌ந்து‌விடு‌கிறா‌ர்க‌ள். இதனா‌ல் ப‌ள்‌ளி‌த் தே‌ர்வுக‌ளி‌ல் ந‌ல்ல ம‌தி‌ப்பெ‌ண் வா‌ங்க முடியாம‌ல் போ‌கிறது. பெ‌ரியவ‌ர்களு‌க்கு‌ம் ஞாபக மற‌தி ஏ‌ற்படு‌கிறது. இதனை‌த்
» திடீ‌ர் நோ‌ய்‌க்கு எ‌ன்ன காரண‌ம்?
» மன‌தி‌ல் அ‌ச்ச‌ம் ஏ‌ற்படுவது எதனா‌ல்?
» தலைவ‌லி வருவது எதனா‌ல்
» ‌தியான‌லி‌ங்க‌ம்: வெ‌ளி‌ச்ச‌ம் வரு‌‌கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum