திருப்பள்ளியெழுச்சி 5
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருப்பள்ளியெழுச்சி 5
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!
பொருள்....
வளம் பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் அரசே நீ,நிலம், நீர், நெருப்பு,காற்று, ஆகாயம் என ஐம்பெரும்
பூதங்களிலும் கலந்திருப்பவன் என்று புலவர்கள் பாடுகின்றனர். அதுமட்டுமின்றி பிறப்பும், இறப்பும் இல்லாதவன் என கூறி கீதங்களால்
பாடுகின்றனர்.
ஆனாலும் உன்னை பார்த்தவர்களை பார்த்து அறிந்ததில்லை நாங்கள், சிந்தனையில் எட்டாதவாக இருந்தாலும் நாங்கள்
செய்கின்ற தவறுகளையும், குற்றங்களையும் நீக்கி காத்தருள வேண்டும். எம்பெருமானே! துயில் நீங்கி அருள்புரிவாயாக!
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum