திருப்பள்ளியெழுச்சி 4
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருப்பள்ளியெழுச்சி 4
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே
பொருள்.....
திருப்பெருந்துறையில் கோவில் கொண்டுள்ள சிவபெருமானே! உன்னை வணங்குவதற்காக வீணை இசைப்போரும், யாழினை உடையோரும்
ஒரு பக்கத்தில் நிற்கின்றனர். வேத மந்திரங்களை பாடுபவர்களும், துதிபாடுபவர்களும், மாலை ஏற்றியவர்களும் ஒரு பக்கம் உள்ளனர்.
உன்னை கும்பிட்ட கைகளை உடையோரும் ஆனந்தக் கண்ணீர் சிந்திதுவண்டிருப்போரும் ஒரு பக்கம் உள்ளனர். தலையில் கை வைத்து
வணங்குபவர்களும், உன் கோவிலில் சூழ்ந்து நிற்கின்றனர். ஆனால் ஒரு தகுதியும் இல்லாத என்னையும் ஆட்கொண்டு அருள்புரியும்
எம்பெருமானே துயில் நீங்கி பள்ளி எழுந்தருள்வாயாக!
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum