திருப்பள்ளியெழுச்சி – 3
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருப்பள்ளியெழுச்சி – 3
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
பொருள்....
இனிய குரல் உடைய குயில்கள் ஆனந்தமாக கூவின. கோழிகளுடன் இணைந்து மற்ற
பறவைகளும், இனிமையாக ஒலி எழுப்பின. பொழுது விடிந்ததை அறிவிக்க சங்குகளும்
முழங்கின. சூரியன் வரவால் வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் மறைந்தன.உதய
காலத்து வெளிச்சம் தோன்றுகிறது. தேவாதி தேவனே திருப்பெருந்துறையில்
வசிக்கும் சிவபெருமானே வீரக்கழல் அணிந்த உன் திருவடி பாதங்களை காட்டி அருள்
புரிவாயாக எவராலும் அறிய முடியாதவனே உன்னை நம்பி வரும் எங்களுக்கு
எளிமையானவளே எம்பெருமானே துயில் நீங்கி எழுவாயாக
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum