தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்பள்ளியெழுச்சி – 3

Go down

திருப்பள்ளியெழுச்சி – 3 Empty திருப்பள்ளியெழுச்சி – 3

Post  amma Fri Jan 11, 2013 12:38 pm

திருப்பள்ளியெழுச்சி – 3 6fd14f27-1fd7-4ab9-8d65-8452f037084a_S_secvpf









கூவின பூங்குயில் கூவின கோழி

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

ஓவின தாரகை யொளிஒளி உதயத்

தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்

தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்

எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.


பொருள்....

இனிய குரல் உடைய குயில்கள் ஆனந்தமாக கூவின. கோழிகளுடன் இணைந்து மற்ற
பறவைகளும், இனிமையாக ஒலி எழுப்பின. பொழுது விடிந்ததை அறிவிக்க சங்குகளும்
முழங்கின. சூரியன் வரவால் வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் மறைந்தன.உதய
காலத்து வெளிச்சம் தோன்றுகிறது. தேவாதி தேவனே திருப்பெருந்துறையில்
வசிக்கும் சிவபெருமானே வீரக்கழல் அணிந்த உன் திருவடி பாதங்களை காட்டி அருள்
புரிவாயாக எவராலும் அறிய முடியாதவனே உன்னை நம்பி வரும் எங்களுக்கு
எளிமையானவளே எம்பெருமானே துயில் நீங்கி எழுவாயாக
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum