திருப்பள்ளியெழுச்சி – 2
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருப்பள்ளியெழுச்சி – 2
அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தருளாயே.
பொருள்:
பெரியோய்!
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! அருட்செல்வத்தைக்
கொடுக்க வருகின்ற இன்ப மலையே! அலைகளையுடைய கடல் போன்றவனே! சூரியன் தேர்ப்
பாகன் இந்திரன் திசையாகிய கீழ்த்திசை அடைந்தான்.
இருள்
முழுதும் நீங்கிவிட்டது. உதய மலையில் உனது திருமுகத்தினின்றும்
தோன்றுகின்ற கருணையைப் போல, சூரியன் மேல் எழுந்தோறும் உனது கண் போன்ற வாசனை
பொருந்திய தாமரை விரிய, அவ்விடத்தில் பொருந்திய கூட்டமாகவும் வரிசையாகவும்
விளங்குகின்ற வண்டுகள் இசை பாடுகின்றன. இவற்றைத் திருவுள்ளம் பற்றுக!
பள்ளி எழுந்தருள்வாயாக!
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum