தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நிலக்கடலை சாகுபடி டிப்ஸ்

Go down

நிலக்கடலை சாகுபடி டிப்ஸ் Empty நிலக்கடலை சாகுபடி டிப்ஸ்

Post  meenu Tue Mar 19, 2013 5:43 pm

நிலக்கடலை
சாகுபடியில் உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளை வேளாண் துறை அறிமுகம்
செய்துள்ளது. இந்த சாகுபடி முறைகளை பின்பற்றினால் அதிக மகசூலும், அதிக
வருமானமும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.


  • நிலக்கடலை பயிர் சாகுபடிக்கு மணல் பாங்கான வண்டல், செம்மண் மற்றும் வண்டல் நிலங்கள் ஏற்றது.
  • சட்டிக்கலப்பையை பயன்படுத்தி மூன்று அல்லது நான்கு இரும்பு கலப்பை அல்லது நாட்டு கலப்பையை கொண்டு மண் புழுதியாகும் வரை உழ வேண்டும்.
  • பொதுவாக டி.எம்.வி., 2, டி.எம்.வி., 7, ஜே.எல்., 24 ஆகிய ரகங்களை சேர்ந்த நிலக்கடலை விதைகளை சாகுபடி செய்யலாம்.
  • நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் தென்னை நார் கழிவினை ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் கடைசி உழவுக்கு முன் இட வேண்டும்.
  • மானாவாரி பயிருக்கு 9 கிலோ யூரியா, 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும்
    30 கிலோ பொட்டாஷ் உரத்தினை ஊட்டமேற்றிய தொழு உரமாக இட வேண்டும்.
  • விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளுரசன்ஸ் நுண்ணியிரையை கலக்க வேண்டும்
  • விதைக்கும்போது ஏக்கருக்கு தேவையான விதையுடன் இரு பாக்கெட் ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இரு பாக்கெட் உரங்களை ஆரிய அரிசி கஞ்சியில் கலந்து விதைக்க வேண்டும்.
  • இதனால், நிலக்கடலை பயிரின் வேர் முடிச்சு காற்றில் உள்ள தழைச்சத்தை பயிருக்கு கிடைக்க செய்கிறது.
  • ஏக்கருக்கு, 5 கிலோ நூண்ணூட்ட சத்து கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்தவுடன் நிலத்தின் மேல் சீராக தூவ வேண்டும்.
  • விதைத்த 45ம் நாள் ஏக்கருக்கு, 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைக்க
    வேண்டும். ஜிப்சத்தில் உள்ள சுண்ணாம்பு சத்து 24 சதவீதம் மற்றும் கந்தக
    சத்து 18.8 சதவீதம் நிலக்கடையில் திரட்சியான காய்கள் உருவாகி மகசூல்
    அதிகரிக்க செய்கிறது.
  • நிலக்கடை சாகுபடி செய்த வயலை சுற்றி ஆமணக்கு பயிரிட்டு புரோடீனியா தாய் பூச்சியின் முட்டைகளையும், இளம் புழுக்களையும் அழிக்கலாம்.
  • 10:1 என்ற விகிதத்தில் நிலக்கடலையில் தட்டைப்பயறு ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும்.
  • நிலக்கடை செடிகளில் இலைகள் முதிர்ந்து காய்ந்த நிøயில் மேல்மட்ட இலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும்போது அறுவடை செய்ய வேண்டும்.
  • இந்த தொழில்நுட்பம் மூலம் நிலக்கடலை சாகுபடி செய்தால் ஏக்கருக்கு, 600
    கிலோ வரை உலர்ந்த காய்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதன் மதிப்பு இன்றைய
    விலையில் 25,000 ரூபாய்.
  • நிலக்கடலைக்கு தேவையான உயிர் உரங்கள், ஜிப்சம் ஆகியவை 50 சதவீதம் மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது

இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் நாகராஜ் கூறியுள்ளார்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum