தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்பள்ளியெழுச்சி 1

Go down

 திருப்பள்ளியெழுச்சி 1  Empty திருப்பள்ளியெழுச்சி 1

Post  amma Fri Jan 11, 2013 12:37 pm

 திருப்பள்ளியெழுச்சி 1  183ab185-8bcc-4ba9-a5ca-301058dbda06_S_secvpf








போற்றியென் வாழ்முத லாகிய பொருளே!

புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு

ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்

எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்;

சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!

ஏற்றுயர் கொடியுடை யாய்யெனை யுடையாய்!

எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!


பொருள்.....
என் வாழ்க்கையின் முதல் பொருளாக இருக்கும் எம்பெருமானே உன்னை வணங்குகிறேன். காலைப்பொழுது விடிந்து விட்டது. உனது
திருப்பாதங்களை வணங்கி மலர் தூவி வழிபடுகின்றோம். உன் ஒளி வீசும் முகத்தில் இருந்து வரும் புன்சிரிப்பிற்கு அடிமையாகி
மகிழ்ச்சியுடன் வணங்கி நிற்கிறோம்.

தாமரை மலர்கள் நிறைந்த வயல்களுடைய திருப்பெருந்துறையில் வாழ்கின்ற சிவப்பரம் பொருளே!
காளை வாகனக்கொடியை உடையவனே எங்களை ஆட்கொள்பவனே! எம்பெருமானே!! தூக்கம் நீங்கி எழுந்து அருள்புரிவாயாக!
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum