தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காய்கறி செடிகளில் அசுவுணி பூச்சி தாக்குதலை தடுப்பது எப்படி

Go down

காய்கறி செடிகளில் அசுவுணி பூச்சி தாக்குதலை தடுப்பது எப்படி Empty காய்கறி செடிகளில் அசுவுணி பூச்சி தாக்குதலை தடுப்பது எப்படி

Post  meenu Tue Mar 19, 2013 4:44 pm

காய்கறி பயிர்களை தாக்கும் பல வகை சாறு உறிஞ்சும் பூச்சிகளில் மிக முக்கியமானது அஸ்வினி.பலவகை அசுவுணிகள் காய்கறி பயிர்களை பெரிதும் பாதிக்கச் செய்து வருகிறது.

அசுவிணி பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்

இலைகள் கூட்டம் கூட்டமாக குருத்துப் பகுதியிலும் இலைகளுக்கடியிலும் இருந்து சாற்றை உறிஞ்சி சேதத்தை ஏற்படுத்தும்.
மிகவும் பாதிக்கப்பட்ட செடிகளில் வளர்ச்சி குன்றி குருத்து இலைகள் சுருங்கி வாடி காய்ந்துவிடும்.
மேலும், இப்பூச்சிகளின் பனித்துளி போன்ற கரிமப்பொருள் இலைகளின் மீது விரிந்து அவற்றின் மீது ஒரு வகை கருமையான பூசணம் வரை ஏதுவாகிறது.
அசுவுணிகள் சாறு உறிஞ்சும்போது மறைமுகமாக சில வைரஸ் கிருமிகளை செடிகளுக்குள் செலுத்தி அவரைத் தேமல், வெள்ளரித் தேமல் போன்ற நோய்களை பரவச் செய்கிறது.
இப்பூச்சிகள் மிகச் சிறிதாகும். பச்சை அல்லது இளம் மஞ்சள் அல்லது கருப்பு நிறத்தில் காணப்படும்.
அசுவுணியில் இறக்கை இல்லாமலும், இறக்கைகளை உடையவைகளும் காணப்படும். அவை மஞ்சளாகவோ அல்லது மஞ்சள் கலந்த பச்சை அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது கருப்பு நிறமாகவோ காலநிலைகளையும் பயிர்களையும் பொருத்து காணப்படும்.
இப்பூச்சிகள் கருவுறாமல் வெற்றின உயிர்களை பிறப்பிக்கக் கூடியது. ஒரு பூச்சியில் இருந்து 22 இனம் அசுவுணி வெளிப்பட்டு அவை ஒரு வாரததில் முழு வளர்ச்சியடைந்துவிடும்.
இலைகள் கத்தரி, மிளகாய், தட்டை, உருளை, முட்டைகோஸ், காளிபிளவர், முள்ளங்கி, பூசணி, புகையிலை ஆகியற்றை தாக்கும்.அதை கட்டுப்படுத்த அசுவுணி தாக்கி தேமல் நோய் தென்படும்.

தடுப்பு முறைகள்

தாக்கப்பட்ட செடிகளை அகற்றி எரித்துவிடவேண்டும்.
களைச் செடிகளை நீக்கி அசுவுணியின் பெருக்கத்தை குறைக்க வேண்டும்.
நன்மை செய்யும் பூச்சிகளான பொறிவண்டு, சிற்பிட் ஈ போன்றவை நடமாட்டம் தென்பட்டால் ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது.
வேப்பம் பருப்புச் சாறு 5 சதம் அல்லது வேப்ப எண்ணெய் 2 சதம் அதனுடன் ஒரு லிட்டருக்கு 4 மில்லி ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும்.
பொறி வண்டுகள் ஒரு நாளைக்கு 270 அசுவுணிகள் உண்ணும் திறனுடையது.
சிலந்தி மற்றும் எறும்புகளும் அசுவுணிகளை பிடித்து உண்ணும்.

இவ்வாறு “காய்கறி பயிர்களின் தாக்கும் அசுவுணி பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை முறைகளை பின்பற்ற வேண்டும்” என, நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum