என்னோட படத்துக்கு விருது கிடைக்கலயே.. புலம்பும் முருகதாஸ்!
Page 1 of 1
என்னோட படத்துக்கு விருது கிடைக்கலயே.. புலம்பும் முருகதாஸ்!
59-வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் தமிழில் 'வாகை சூட வா' படத்திற்கு சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான விருதும், 'ஆரண்யகாண்டம்' படத்திற்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருதும், சிறந்த துணை நடிகருக்கான விருது 'அழகர்சாமியின் குதிரை' படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கும் கிடைத்திருக்கிறது. விருதுகளைப் பெற்றவர்களுக்கு எல்லாம் பகிரங்கமாக வாழ்த்துரை பாடிய முருகதாஸ் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் புலம்பித் தவித்ததாக கோடம்பாக்கம் வட்டாரம் கூறுகிறது. காரணம்! அவரது பாக்ஸ் ஸ்டூடியோஸ் தயாரித்த சரவணன் இயக்கிய 'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு எந்த விதமான அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பது தானாம். 'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு ஏதாவது ஒரு பிரிவில் தேசிய விருது கிடைக்கும் என தான் நம்பியதாகவும் ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் விருதுப்பட்டியல் தன்னை மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாக்கியிருப்பதாகவும் மனிதர் புலம்பித்தள்ளுவதாக விவரமறிந்த வட்டாரம் கூறுகிறது! ஐயோ..! நம்ம முருகதாஸயே புலம்ப வச்சிட்டாங்களே.....
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய் படத்துக்கு தலைப்பு ‘துப்பாக்கி’… – ஏ ஆர் முருகதாஸ் சம்பளம் ரூ12 கோடி!
» கோ படத்துக்கு நாகிரெட்டி விருது!
» ஜீவா நடித்த ‘கோ’ படத்துக்கு விருது
» "கோ' படத்துக்கு நாகி ரெட்டி விருது
» ‘வழக்கு எண் 18/9’ படத்துக்கு தெற்காசிய திரைப்பட விருது
» கோ படத்துக்கு நாகிரெட்டி விருது!
» ஜீவா நடித்த ‘கோ’ படத்துக்கு விருது
» "கோ' படத்துக்கு நாகி ரெட்டி விருது
» ‘வழக்கு எண் 18/9’ படத்துக்கு தெற்காசிய திரைப்பட விருது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum