தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நவீன கரும்பு சாகுபடியால் விளைச்சலை அதிகரிக்கலாம்

Go down

நவீன கரும்பு சாகுபடியால் விளைச்சலை அதிகரிக்கலாம் Empty நவீன கரும்பு சாகுபடியால் விளைச்சலை அதிகரிக்கலாம்

Post  meenu Tue Mar 19, 2013 2:04 pm

“நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையால், கரும்பு விளைச்சலை அதிகரிக்க முடியும்’ என, கரும்பு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், “நீடித்த நவீன கரும்பு சாகுபடிக்கான நாற்றாங்கால் தொழில்நுட்பங்கள்’ குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு, கரும்பு ஆலைகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு நடந்தது. மாநிலம் முழுவதிலிருந்தும் 45 அலுவலர்கள் பங்கேற்றனர்.

பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி, பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது:

தமிழகத்தின் மொத்த கரும்பு சாகுபடி பரப்பு, 3.06 லட்சம் எக்டர். இதன் சராசரி விளைச்சல், எக்டருக்கு 105 டன்கள். தேசிய அளவில், கரும்பு உற்பத்தி திறனில், தமிழகம் முன்னிலையில் உள்ளது.
நீடித்த நவீன கரும்பு சாகுபடி மூலம், ஒரு எக்டருக்கு 249 டன்கள் வரை, விளைச்சல் பெற முடியும் என, சோதனை திட்டங்கள் மூலம், கண்டறியப்பட்டுள்ளன.
இதன் மூலம், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, சாகுபடியினை அதிகரிக்க செய்யலாம்.
நீடித்த நவீன கரும்பு சாகுபடியில், பரு வில்லை கரணை பயிரிடும் முறை மூலம், 250 கிலோ கரணைகளை மட்டும், ஒரு எக்டருக்கு பயன்படுத்தி, உற்பத்தி செலவை குறைக்கலாம்.
மரபாக கரும்பு பயிரிடும் உழவர்களுக்கு, இந்த நவீன முறையை கற்றுத்தர, கரும்பு அலுவலர்கள் முன்வர வேண்டும்.
தமிழகத்தில் பயிரிட்டு வரும்,கோ 86032 என்ற கரும்பு ரகத்தில், சிவப்பு வேர் அழுகல் நோய் தாக்கும். தமிழ்நாடு வேளாண் பல்கலை, சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய கரும்பு ரகங்களான, கோ.க 24, சிறுகமணி 7 ஆகிய, ரகங்களை பயிரிடுவது நல்லது.
கோ.க 24 ரகம் அதிக விளைச்சலாக, எக்டருக்கு 228 டன்களை தரக்கூடியது.
இந்த ரகத்தை பயிரிட்டு, நீடித்த நவீன கரும்பு சாகுபடி மூலம், எக்டருக்கு 300-350 டன் விளைச்சலை பெறலாம்.
இந்த ரகம், இயந்திர அறுவடைக்கும் உகந்தது; 12 சதவீதம் வரை சர்க்கரை கட்டுமானம் கிடைக்கும்.
சிறுகமணி 7 ரகத்தில், 13.6 சதவீதம் வரை, சர்க்கரை கட்டுமானம் கிடைக்கும். சர்க்கரை ஆலைகளில், பொதுவாக 10 சதவீதம் வரை மட்டுமே, சர்க்கரை கட்டுமானம் கிடைக்கிறது.
எனவே, புதிய கரும்பு ரகங்களை, கரும்பு அலுவலர்கள் உழவர்களுக்கு அறிமுகப்படுத்தி, உழவர்கள் பயனடையச் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum