தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கரும்பில் இடைக்கணு புழு கட்டுப்படுத்த வழிகள்

Go down

கரும்பில் இடைக்கணு புழு கட்டுப்படுத்த வழிகள் Empty கரும்பில் இடைக்கணு புழு கட்டுப்படுத்த வழிகள்

Post  meenu Tue Mar 19, 2013 1:21 pm

கரும்பில் இடைக்கணு புழுவைக் கட்டுப்படுத்த கரும்பு நடவு செய்த 120 நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு ஒரு சி.சி., வீதம் டிரைக்கோரிராமா, ஒட்டுண்ணி முட்டை அட்டை கட்ட வேண்டும்

இப்புழு கணுக்களை பாதிப்பதால், கணுக்களின் இடைவெளி குறைந்துவிடும்.
கணுக்களின் உட்புறம் திசுக்கள் சிவந்து விடும்.
கணுக்களின் அருகே புழுக்களின் துளைகள் இருக்கும். அவை முழுமையாக பாதிக்கப்பட்டு மேலே சத்துகள் செல்லாததால், கரும்பின் வளர்ச்சி குன்றி, குருத்து இலைகள் காய்ந்துவிடும்.
அதனால் கரும்பின் எடை, தரம், சர்க்கரை சத்துக்கள் குறைந்து மகசூல் இழப்பு ஏற்படும்.
இடைக்கணு புழுவைக் கட்டுப்படுத்த கரும்பு நடவு செய்த 120 நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு ஒரு சி.சி., வீதம் டிரைக்கோரிராமா ஒட்டுண்ணி முட்டை அட்டைகளை கட்ட வேண்டும்.
அட்டைகளை மாலை வேளையில் இலையின் பின்புறத்தில் கட்ட வேண்டும்.
150ம் நாள் மற்றும் 210ம் நாளில் சோகை உறிக்க வேண்டும்.
ஒட்டுண்ணி அட்டை ஒட்டுண்ணி வளர்ப்பு மையத்தில் கிடைக்கும். தேவைப்படும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம்

இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் சுப்ரமணியம் பேசினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum