தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கரும்பில் இடைக்கணு புழுவை அழிக்க ஒட்டுண்ணி முறை

Go down

கரும்பில் இடைக்கணு புழுவை அழிக்க ஒட்டுண்ணி முறை Empty கரும்பில் இடைக்கணு புழுவை அழிக்க ஒட்டுண்ணி முறை

Post  meenu Tue Mar 19, 2013 1:08 pm

கரும்பில் இடைக்கணு புழுவை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒட்டுண்ணியை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேல்மலையனூர் வேளாண் உதவி இயக்குனர் பழனிவேலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் ஏக்கருக்கு 1200 மெட்ரிக் டன் பெறுவதற்காக செம்மை சாகுபடி மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும்.
தொழில் நுட்ப பயிற்சி வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் ராஜ் ஸ்ரீசுகர்ஸ் மூலம் வழங்கப்படுகிறது.
மக்கிய தொழு உரம், மண்புழு உரத்தை பயன்படுத்தினால் மண் வளம் பெருகும் அதிக விளைச்சலும் கிடைக்கும்.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மண்புழு உற்பத்தி கூடராம் அமைக்க 50 சதவீதம் மானியத்தில் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்க 50 சதவீத மானியத்தில் 2425 ரூபாய் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் தங்களது வேளாண் மற்றும் கால்நடை கழிவுகளை முறையாக மக்க வைத்து பயன் படுத்தி கொள்ள முன்வர வேண்டும்.
கரும்பில் காணப்படும் இடைக்கணு புழுவை கட்டுப்படுத்த எந்த ரசாயன பூச்சி மருந்துகளாலும் 100 சதவீதம் முடியாது.
ஒட்டுண்ணி விடுவதால் மட்டுமே 100 சதவீதம் இந்த புழுவை ஒழிக்க முடியும். சுற்று புற சூழல் மாசு படுவதையும் தவிர்க்கலாம்.
அவலூர்பேட்டை அடுத்த தாயனூர் கிராமத்தில் ஒட்டுண்ணி உற்பத்தி மையம் உள்ளது.
இங்கு செம்மேடு ராஜ்ஸ்ரீசுகர்ஸ் கரும்பு ஆலை விவசாயிகள் ஒட்டுண்ணியை பெற்று இடைக்கணு புழுவை கட்டுப்படுத்தி பயனடையலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum