அரிதாரமங்கலம் அரன் ஆலய குடமுழுக்கு
Page 1 of 1
அரிதாரமங்கலம் அரன் ஆலய குடமுழுக்கு
திருவண்ணாமலையிலிருந்து 15 கி.மீ தொலைவில், பருவத மலைக்கு தெற்கே
அமைந்துள்ளது, சப்த கைலாய க்ஷேத்திரங்களில் ஒன்றான அரிதாரமங் கலம்,
செய்யாற்றின் கரையில் உள்ள இத்தல இறைவனின் திருநாமம் கைலாசநாதர். அன்னையின்
அழகுப் பெயர் பெரியநாயகி. இறைவனுடன் இணைய காஞ்சியிலிருந்து திருவண்ணாமலை
வந்து கொண்டிருந்த அன்னை பார்வதிக்கு தண்ணீர் தாகம் உண்டாயிற்று. தண்ணீர்
வேண்டுமென முருகனை கேட்க, முருகனும் தீர்த்த மலையை நோக்கி அம்பு எய்தார்.
அங்கு தவம் செய்து கொண்டிருந்த ஏழு ரிஷிகளின் தலையை கொய்தபின், அந்த அம்பு
தீர்த்த மலையை அடைந்தது. அம்பு பட்டு தீர்த்த மலையிலிருந்து வந்த
தண்ணீரில் ரிஷிகளின் குருதி கலக்க, அந்த நீர் சிவப்பாக மாறி செய்யாறு என்ற
நதியானது.
அந்த நதி சிவப்பாக இருந்ததாலும் முருகன் என்கிற சேயால்
உண்டாக்கப்பட்டதாலும் செய்யாறு என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. ஏழு
ரிஷிகளின் மரணத்திற்குக் காரணமாகி விட்டோமே என வருந்திய முருகன் ஈசனை
நோக்கித் தவமிருந்தார். பிரம்மஹத்தி தோஷம் நீங்க செய் யாற்றின் கரையில் ஏழு
லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபடச் சொன்னார் ஈசன். அப்படி முருகன்
பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்களே சப்த கரைகண்ட க்ஷேத்திரங்களாயின.
பார்வதிதேவியும் தன்னால்தான் தன் குழந்தைக்கு இந்தக் கஷ்டம் வந்தது என
வருந்தி இறைவனிடம் வேண்ட, இறைவனும் நீ ஏழு இடங்களில் லிங்கத்தை வைத்து
வழிபடு என பணித்தார். அந்த ஏழு இடங்களே சப்த கைலாச க்ஷேத்திரமாயிற்று
என்கிறது தலபு ராணம்.
பாவம் நீக்கி பாரம் குறைக்கும் பரமனின்
கருணை, கடல் என்றால், அன்னை பெரியநாயகியின் வரமருளும் வேகத்தை வார்த்தையால்
வர்ணிக்க முடி யாது. திருமண வரம் வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும் எளிய
பரிகாரமாக இரண்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, கோரினாலே போதும், கைமேல் பலன்
என்கிறார்கள். இந்தப் பழமையான கோயிலுக்கு திருப்பணிகள் நிறைவேறி, ஜனவரி
27.1.2013 அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆலயத் தொடர்புக்கு:
9442743803, 9840053289
அமைந்துள்ளது, சப்த கைலாய க்ஷேத்திரங்களில் ஒன்றான அரிதாரமங் கலம்,
செய்யாற்றின் கரையில் உள்ள இத்தல இறைவனின் திருநாமம் கைலாசநாதர். அன்னையின்
அழகுப் பெயர் பெரியநாயகி. இறைவனுடன் இணைய காஞ்சியிலிருந்து திருவண்ணாமலை
வந்து கொண்டிருந்த அன்னை பார்வதிக்கு தண்ணீர் தாகம் உண்டாயிற்று. தண்ணீர்
வேண்டுமென முருகனை கேட்க, முருகனும் தீர்த்த மலையை நோக்கி அம்பு எய்தார்.
அங்கு தவம் செய்து கொண்டிருந்த ஏழு ரிஷிகளின் தலையை கொய்தபின், அந்த அம்பு
தீர்த்த மலையை அடைந்தது. அம்பு பட்டு தீர்த்த மலையிலிருந்து வந்த
தண்ணீரில் ரிஷிகளின் குருதி கலக்க, அந்த நீர் சிவப்பாக மாறி செய்யாறு என்ற
நதியானது.
அந்த நதி சிவப்பாக இருந்ததாலும் முருகன் என்கிற சேயால்
உண்டாக்கப்பட்டதாலும் செய்யாறு என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. ஏழு
ரிஷிகளின் மரணத்திற்குக் காரணமாகி விட்டோமே என வருந்திய முருகன் ஈசனை
நோக்கித் தவமிருந்தார். பிரம்மஹத்தி தோஷம் நீங்க செய் யாற்றின் கரையில் ஏழு
லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபடச் சொன்னார் ஈசன். அப்படி முருகன்
பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்களே சப்த கரைகண்ட க்ஷேத்திரங்களாயின.
பார்வதிதேவியும் தன்னால்தான் தன் குழந்தைக்கு இந்தக் கஷ்டம் வந்தது என
வருந்தி இறைவனிடம் வேண்ட, இறைவனும் நீ ஏழு இடங்களில் லிங்கத்தை வைத்து
வழிபடு என பணித்தார். அந்த ஏழு இடங்களே சப்த கைலாச க்ஷேத்திரமாயிற்று
என்கிறது தலபு ராணம்.
பாவம் நீக்கி பாரம் குறைக்கும் பரமனின்
கருணை, கடல் என்றால், அன்னை பெரியநாயகியின் வரமருளும் வேகத்தை வார்த்தையால்
வர்ணிக்க முடி யாது. திருமண வரம் வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும் எளிய
பரிகாரமாக இரண்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, கோரினாலே போதும், கைமேல் பலன்
என்கிறார்கள். இந்தப் பழமையான கோயிலுக்கு திருப்பணிகள் நிறைவேறி, ஜனவரி
27.1.2013 அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆலயத் தொடர்புக்கு:
9442743803, 9840053289
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum