தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் இயக்குநர் நாற்காலியை தூசுதட்டிய சேரன்!

Go down

மீண்டும் இயக்குநர் நாற்காலியை தூசுதட்டிய சேரன்! Empty மீண்டும் இயக்குநர் நாற்காலியை தூசுதட்டிய சேரன்!

Post  ishwarya Mon Mar 18, 2013 2:24 pm

ரசிகர்களின் விருப்பத்துக்குரிய இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் சேரன். தங்கர் பச்சான் இயக்கிய 'சொல்ல மறந்த கதை' மூலம் நாயக அவதாரம் எடுத்தவர், அதன் பிறகு இயக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். 'ஆட்டோகிராஃபுக்கு' பிறகு சேரன் நடித்த படங்கள் எதுவும் எடுபடவில்லை. கடைசியாக இவர் இயக்கிய 'பொக்கிஷம்' படம் ஒரு நாள் மட்டுமே தியேட்டரில் இருந்தது. என்றாலும் இயக்கத்தை மறந்து, 'யுத்தம் செய்', 'முரண்', 'மூன்றுபேர் மூன்று காதல்' என்று அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வந்தவருக்கு என்ன தோன்றியதோ, சேரன் தனக்கு இயக்கமே பலம் என்று நினைத்து மீண்டும் தனது இயக்குநர் நாற்காலியை தூசு தட்டியிருக்கிறார். இம்முறை கதையை அவரே எழுதாமல் 'நியான் நகரம்' என்ற நாவலை படமாக்க முன்வந்துவிட்டார். இந்தப் படத்தை இயக்க மட்டுமே செய்யும் சேரன், தனது ஹீரோவாக 'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை, குறிப்பாக இளம் தமிழ் ரசிகைகளை கவர்ந்த வளர்ந்து வரும் தெலுங்கு ஹீரோ சர்வானந்த்தை தேர்வு செய்திருக்கிறார். கதைக்கு பொருத்தமான கதாநாயகியைத் தேடிவரும் சேரன், ஜீ.வி. பிரகாஷை இசையமைப்பாளராக தேர்வு செய்திருக்கிறார். விரைவில் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள். அப்பாடா! இப்பவாச்சும் ஞானோதயம் வந்துச்சே..... இனியாச்சும் ஜனங்கள கஷ்டப்படுத்தாம அழகான ஹீரோக்கள போடுங்க சார்......

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  மீண்டும் சேரன் படத்தில் சினேகா
» மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவேன்- கமல் மீண்டும் பேச்சு
» மீண்டும் மீண்டும் உடலுறவு ஆவலை தூண்ட செய்ய வேண்டியது என்ன?
» மீண்டும் எஸ்எம்எஸ் தொல்லை – போலீஸில் மீண்டும் சினேகா புகார்!
» மீண்டும் உடல்நிலை பாதிப்பு – மீண்டும் மருத்துவமனையில் ரஜினி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum