தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மைதானத்திலேயே தூங்கிய பாகிஸ்தான் வீராங்கனைகள்! Pics

Go down

மைதானத்திலேயே தூங்கிய பாகிஸ்தான் வீராங்கனைகள்! Pics Empty மைதானத்திலேயே தூங்கிய பாகிஸ்தான் வீராங்கனைகள்! Pics

Post  meenu Sun Mar 17, 2013 12:53 pm



26


பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியினர் ஓட்டலுக்கு செல்லாமல் மைதானத்திலேயே தூங்கினர்.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) நடத்தும் 10வது மகளிர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நாளை முதல் பிப்ரவரி 17ம் திகதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.

இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய ராணுவ வீரர்கள் சமீபத்தில் கொடூரமாக கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியா, பாகிஸ்தான் உறவில் விரிசல் விழுந்தது.

இதனால், பாகிஸ்தான் மகளிர் அணிக்கு மும்பையில் எதிர்ப்பு கிளம்பியது. கடைசியில், குரூப் “பி“யில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் கட்டாக்கில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தற்போது கட்டாக், பாரபதி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் வரும் 1ம் திகதி அவுஸ்திரேலியாவை சந்திக்கவுள்ளது.

இந்த வீராங்கனைகள் தங்குவதற்கு அருகிலுள்ள ஓட்டல் தயார் செய்யப்பட்டது. கடைசியில் பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்கள் மைதானத்தில் உள்ள “கிளப் ஹவுசில்” தங்கியுள்ளனர். இங்கேயே தூங்கினர்.

இது குறித்து அணி முகமையாளர் ஆயிஷா ஆஷர் கூறுகையில், நிர்வாகிகள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ள வசதிகள் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

ஐ.சி.சி., செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பாகிஸ்தான் அணியினர் மைதானத்தில் தங்கியது உண்மை தான் என்றார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum