தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிருஷ்ண ஜெயந்தி

Go down

கிருஷ்ண ஜெயந்தி Empty கிருஷ்ண ஜெயந்தி

Post  birundha Thu Jan 17, 2013 4:33 pm

* வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்த மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தார். "எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைகிறதோ அப்போதெல்லாம் யுகந்தோறும் நான் அவதரிப்பேன்' என்று கிருஷ்ணரே அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும்போது பகவத்கீதையில் வாக்களித்திருக்கிறார்.
* அறியப்படாத உன்னத கடவுளாகவும், எஜமானராகவும், நண்பனாகவும், சிறுகுழந்தையாகவும், காதலனாகவும், தாயாகவும், தந்தையாகவும் நமக்கு விருப்பமான முறையில் எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
* கிருஷ்ணலீலையைக் கேட்டால் பசி, தாகம் போன்ற உலகியல் விஷயங்கள் நமக்கு தோன்றாது. மதுரமான கிருஷ்ணநாமத்தைக் கேட்பவன் புண்ணிய உலகைச் சென்றடைவது உறுதி.
* புல்லாங்குழல் இசைக்கும்போது கிருஷ்ணருடைய கண்கள் தாமரை மலர் போல மலர்ந்துள்ளன. வசீகரமான மயில் இறகு தலையில் அசைய கோடி மன்மதர்கள் ஒன்று சேர்ந்ததுபோல நம் உள்ளத்தை மயக்குகிறார். கார்மேகம் போன்ற நீலநிறமுடைய அவர், நமக்கு மழை போல் அருளை வாரி வழங்குகிறார்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum