தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண் திருஷ்டியில் நம்பிக்கை உள்ளதா? பரிகாரம் என்ன செய்யலாம்?

Go down

கண் திருஷ்டியில் நம்பிக்கை உள்ளதா? பரிகாரம் என்ன செய்யலாம்? Empty கண் திருஷ்டியில் நம்பிக்கை உள்ளதா? பரிகாரம் என்ன செய்யலாம்?

Post  meenu Sat Mar 16, 2013 6:24 pm

கண் திருஷ்டியில் நம்பிக்கை உள்ளதா? பரிகாரம் என்ன செய்யலாம்? Kan-Thrishti-Ganapathy

கண் திருஷ்டி என்பது மனதில் பொறாமை கொண்டு பார்ப்பவர்களின் எதிமறை
அலைகளின் விளைவு ஆகும். இதனால் காரிய தடை, சிக்கல்கள், துன்பங்கள்
ஏற்படுமென நம்பப்படுகிறது.

கண் திருஷ்டிக்கு என்ன செய்யலாம்?

எதிர்மறையான பார்வைகளின் கவனத்தை கலைத்து அவர்களுடைய ஒட்டுமொத்த
சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க
வேண்டும். இதுதான் முக்கியம்.



சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு
மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய
சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல்
போய்விடும். இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.

இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய
குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா
முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம்.
இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.

சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர்,
நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள்.
சிலர் கண்திருஷ்டி பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர்
கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை
செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்.

ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு
ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக
வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள்
போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு
இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு
விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ
அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை
வைத்தால் இன்னும் நல்லது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» திருமண தோஷமா? பரிகாரம் என்ன செய்யலாம்?
» குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?
» குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? விதிவிலக்குகள் உண்டா? பரிகாரம் என்ன?
» முக்கிய விரதங்களை மேற்கொள்ள முடியாமல் போனால் என்ன பரிகாரம் செய்யலாம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum