தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன் – மிதுனம் (2.12.2012 – 21.6.2014)

Go down

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன் – மிதுனம் (2.12.2012 – 21.6.2014) Empty ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன் – மிதுனம் (2.12.2012 – 21.6.2014)

Post  meenu Sat Mar 16, 2013 5:37 pm



0


எதையும் திருத்தமாக செய்பவர்களே! 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் சேர்ந்து உங்களை என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு பணவரவையும், பிரபலங்களின் நட்பையும் ஒருபுறம் தந்தாலும் மறுபுறம் வீண் அலைச்சல், பகை, கடன் தொந்தரவு என்று கலங்கடிக்கவும் செய்த ராகுபகவான்! இப்பொழுது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். ஐந்தாம் இடம் ராகுவுக்கு உகந்த இடமல்ல.. என்றாலும் உங்கள் யோகாதிபதி சுக்ரன் வீட்டில் அமர்வதால் கெடுபலன்களை குறைத்து நல்லதையே செய்வார். குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் விவாதம், சண்டை என வந்துபோகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆனாலும் புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் ராகு அமர்வதால் சந்தேகக் கண்ணுடன் எல்லோரையும் பார்ப்பீர்கள்.

இப்படி நடந்திருக்குமோ! அப்படி சொல்லியிருப்பார்களோ! என்றெல்லாம் நினைத்து குழம்புவீர்கள். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்துச் செல்லும். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குலதெய்வ கோவிலை புதுப்பிப்பீர்கள். பயணங்களால் ஆதாயமுண்டு. டென்ஷன், முன் கோபம் இருக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அவர்களின் வருங்காலம் கருதி கொஞ்சம் சேமிக்கவும் செய்வீர்கள். என்றாலும் பிள்ளைகளுடன் அடிக்கடி சண்டை, சச்சரவு வரும்.

உங்களின் குறிக்கோள், கனவுகளை அவர்களிடம் திணிக்க வேண்டாம். அவர்களின் உயர்கல்வி, உத்‌தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். நெடுநாளாக குல தெய்வ கோவிலுக்குப் போக வேண்டுமென சொல்லிக் கொண்டுதானே இருந்தீர்கள். இனி குடும்பத்துடன் சென்று பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சொந்தம்-பந்தங்களின் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். அவ்வப்போது பணம் கேட்டு நச்சரிப்பார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சொத்து தாமதமாக வந்தாலும், குறைவாக வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். சிலர் சொந்த ஊரை விட்டு விலகி அருகிலிருக்கும் நகரத்திற்கு குடிபெயர்வீர்கள்.

இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் சப்தம-தசமஸ்தானாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் உங்களின் எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும். கடனாக கொடுத்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அறிஞர்கள்-கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். மனைவியுடன் ஈகோ பிரச்னை, அவருக்கு ஹார்மோன் கோளாறு, ஃபைப்ராய்டு வரக்கூடும். உத்யோகத்தில் இடமாற்றங்களும், வேலைச்சுமையும் இருக்கும்.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவினங்கள் கூடும். உறவினர்களின் விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நெருங்கிய நண்பரை இழக்க நேரிடும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். ஷேர் மூலம் பணம் வரும்.

உங்கள் சஷ்டம-லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் சொத்து வாங்குவது, விற்பதில் இழப்பு வரும். உடன்பிறந்தவர்கள் அதிருப்தி அடைவார்கள். வாகன விபத்துக் ஏற்படக்கூடும். இரத்த அழுத்தத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். கமிசன், புரோக்கரேஜ் மூலம் திடீர் பணவரவு உண்டு.

பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கொஞ்சம் கண் காணியுங்கள். நல்ல நட்புச்சூழலை உருவாக்கிக் கொடுங்கள். மகனின் கல்வி, வேலை விசயமாக பிரபலங்களின் உதவி நாடி அலைந்தீர்களே! ஒரு பயனும் இல்லையே! ஆனால் இப்பொழுது நல்ல நிறுவனதிலிருந்து வாய்ப்புகள் வரும். ஆன்மீகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். குடும்ப பிரச்சனைகளில் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் அவசர முடிவுகள் வேண்டாம். சிலர் விற்க வேண்டி வரும். பாகப்பிரிவினையில் சிக்கல்கள் வரக்கூடும்.

தாய்மாமன், அத்தை வகையில் பகைமை வெடிக்கும். கலை, இசை இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். வேற்று மொழியினாரால் ஆதாயம் உண்டு. கன்னிப்பெண்களே! தள்ளிப் போய்கொண்டிருந்த திருமணம் இனி கூடி வரும். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாய்ப்பீர்கள். உயர்கல்வியில் தேர்ச்சியடைவீர்கள். மாணவர்களே! வகுப்பாசியர் பாராட்டுவார். தேர்வில் மதிப்பெண்களை குவிப்பீர்கள். கவிதை, ஓவியம், இசைப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும். அரசியல்வாதிகள் எதிர் கட்சியினரை விமர்சித்து பேசவேண்டாம். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அண்டை அயலாருடன் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum