தந்தையால் மகன் துஸ்பிரயோகம்: சிறுவன் பலி
Page 1 of 1
தந்தையால் மகன் துஸ்பிரயோகம்: சிறுவன் பலி
0
சித்திரவதையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஐந்து வயது நிரம்பிய சிறுவன்
ஆபத்தான நிலையில் பதுளை அரசினர் மருத்துவமனையில் நேற்று முன்தினம்
அனுமதிக்கப்பட்டு, சில மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
பண்டாரவளையைச் சேர்ந்த மகுல்லெல்ல பகுதியின் மொகமத் காசிம் என்ற ஐந்து
வயது நிரம்பிய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.சிறுவனின் மரணத்தை
தொடர்ந்து தலைமறைவாகியிருந்த பாலகனின் தகப்பனை, பெரும் சிரமத்தின்
மத்தியில் பண்டாரவளைப் பொலிஸார் நேற்று முன்தினம் (22/2) கைது
செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்
செய்யப்பட்ட போது நீதிபதி அவரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
இது பற்றி கூறப்படுவதாவது, மேற்படி சிறுவனின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றிற்கு வீட்டுப் பணிப் பெண்ணாக தொழிலுக்குச் சென்றுள்ளார்.
இதனால் தந்தையின் சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து மேற்படி சிறுவன்
தந்தையின் பல்வேறு வகையிலான கொடுமைகளுக்கும் சித்திரவதைக்கும்
உட்பட்டுள்ளதுடன் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அச் சிறுவனுக்கு குளவிகள் கொட்டியதாகக் கூறி, பண்டாரவளை
அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து
தியத்தலாவை அரசினர் மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றப்பட்டார்.
வருத்தம் கடுமையானதினால் சிறுவன் விசேட அம்புலன்ஸ் மூலம் பதுளை அரசினர்
மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சைக்குற்படுத்தப்பட்டார்.
பலமணிநேர சிகிச்சையின் பின்னர் சிகிச்சை பயனளிக்காமல் அச்சிறுவன்
உயரிழந்தான்.இச் சிறுவனுக்கு இச்சிறுவனின் ஆண் உறுப்புக்கள் மற்றும்
பின்பகுதி கடித்து குதறப்பட்டுள்ளதுடன், உடம்பின் பல பகுதிகளில் சூடுபட்ட
காயங்களும் காணப்பட்டதாக டாக்டர்கள் கூறினர்.
மேலும் இச்சிறுவன் படு மோசமான சிறுவர் துஷ்பியோகத்திற்கும்
உட்படுத்தப்பட்டிருக்கின்றாரென்று தெரிய வந்துள்ளது. சிறுவன் பண்டாரவளை
அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், பாலகனின் தகப்பன்
தலைமறைவாகியிருந்தார்.
பண்டாரவளைப் பொலிஸார் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக, பெரும் சிரமத்தின் மத்தியில் தகப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூன்றரை வயது சிறுமி மீது 10 வயது சிறுவன் துஸ்பிரயோகம்!
» சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த யுவதி!
» பாலியல் துஸ்பிரயோகம்: வயோதிபரால் இரு சிறுமிகள் சிதைப்பு
» சொந்த மகளை துஸ்பிரயோகம் செய்த காமுக தந்தை!
» பேஸ்புக் நட்பால் 15 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்!
» சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த யுவதி!
» பாலியல் துஸ்பிரயோகம்: வயோதிபரால் இரு சிறுமிகள் சிதைப்பு
» சொந்த மகளை துஸ்பிரயோகம் செய்த காமுக தந்தை!
» பேஸ்புக் நட்பால் 15 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum