தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆண்டவன் அருளை நாடுங்கள்

Go down

ஆண்டவன் அருளை நாடுங்கள் Empty ஆண்டவன் அருளை நாடுங்கள்

Post  birundha Thu Jan 17, 2013 3:52 pm

* காலமெல்லாம் சென்றுவிட்டது. இளமை நம்மைவிட்டு நீங்கிவிட்டது. நம் எதிரே இப்போது காத்துக்கொண்டிருப்பது இறப்பு ஒன்றுதான் என்பதனை எண்ணியேனும் இறைவனை எண்ணிக்கிடக்க வேண்டும்.
* நம் உயிர் நம்மைவிட்டு நீங்கும் சமயத்தில், அலைந்து தேடி வைத்த செல்வமும், அருமை மனையாளும், மக்களும் ஏது செய்தும் நம் இறப்பைத் தவிர்க்க முடியாது 'இறைவா' என்று வேண்டினால், அப்போதும் ஆண்டவன் அருள் கிடைக்கும்.
* பூமிக்குப் பாரமாய், அவல வாழ்க்கையில் ஆசை வைத்து உடலைச் சுமந்து திரியும் உயிருக்கு நற்கதியைத் தேடிக்கொள்ள வேண்டும்.
* உயிரை ஓடவிட்ட உடலை, உற்றார் உறவினர் எடுத்துக் கொண்டுபோய் இடுகாட்டில் வைத்து விறகால் சுட்டுப் பொசுக்கும் நிலையினைப் பெறுவதற்கு முன், ஆண்டவனை எண்ணி மோட்சத்துக்கு வழி தேடிக் கொள்ள வேண்டும்.
* இறைவனை எண்ணாதவர்கள், எல்லா நலன்களையும் இழந்து, மானமிழந்து, நற்குணங்கள் அற்று வறுமை வாய்ப்பட்டு பலபேர் பார்த்து இகழக்கூடிய இழிநிலைக்கு உள்ளாகிச் சாவார்கள்.
* மனைவி, வீடு மற்றும் அறிந்தவர்கள் ஊரோடு சரி; உறவினர் தெரு வரை; ஆனால், ஆண்டவன் அருள்நமக்கு கிடைக்குமானால் நாம் செல்லுமிடமெல்லாம் அது நம்மை பின்தொடரும்.
* இவர் உறவினர், இவர் பகைவர் என்பதெல்லாம் அவரவர் செய்த வினையால் தான். ஆனால், அந்தச் செய்வினை யாரால்? அது ஆண்டவனால்;
* நாவுக்கு அழகு ஆண்டவன் நாமத்தைச் சொல்லல்; பாடலுக்கு அழகு ஆண்டவனைப் பாடுதல்; கலைக்கு அழகு அறிவோடிருத்தல்; தலைக்கு அழகு ஆண்டவன் தாளைத் தாங்குதல்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum