தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கள்ளக்காத‌லி‌யின் செல்போ‌ன் அடிக்கடி ‌பி‌சியாக இரு‌ந்ததா‌ல் கொலை செய்த காதலன்!

Go down

செய்த - கள்ளக்காத‌லி‌யின் செல்போ‌ன் அடிக்கடி ‌பி‌சியாக இரு‌ந்ததா‌ல் கொலை செய்த காதலன்! Empty கள்ளக்காத‌லி‌யின் செல்போ‌ன் அடிக்கடி ‌பி‌சியாக இரு‌ந்ததா‌ல் கொலை செய்த காதலன்!

Post  meenu Wed Mar 13, 2013 4:54 pm


8


illegal relationshipக‌ள்ள‌க்காத‌லி‌யி‌ன் செல்போ‌ன் அடிக்கடி ‌பி‌சியாக இரு‌ந்ததா‌ல் தொடர்பு கொ‌ள்ள முடியாம‌ல் த‌வி‌ர்‌த்த க‌ள்ள‌க்காதல‌ன், வேறுறொருவருட‌ன் க‌ள்ள‌க்காத‌லி தொடர்பு வைத்து இரு‌ப்பதாக ‌நினை‌த்து ஆ‌த்‌திர‌த்‌தி‌ல் அவரை தாலி கயிற்றாலேயே இறுக்கி கொலை செய்துள்ளா‌ர். வாழப்பாடி அருகே இ‌ந்த ச‌ம்பவ‌ம் ‌நிக‌ழ்‌ந்து‌ள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சந்திரபிள்ளை வலசு கிராமத்தை சேர்ந்த குமார் எ‌ன்பவ‌ரி‌ன் மனைவி கலைச்செல்வி (30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் கலைச்செல்வி பருத்தி எடுக்கும் வேலைக்கு சென்றார். மாலையில் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்ப வில்லை.

இந்த நிலையில் கலைச்செல்வி பெருமானூர் ஓடை பகுதியில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வாழப்பாடி போலீசா‌ர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீசார் கலைச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மரு‌த்துவை க்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், கலைச்செல்விக்கும் பெருமானூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அழகப்பன்(32) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அழகப்பனை பிடித்து விசாரணை நடத்தினர்.

‌‌விசாரணை‌யி‌ல், கலைச்செல்வியுடன் அழகப்பன் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு வைத்துள்ளா‌ர். இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விஷயம் ஊருக்கு தெரிய வர கலைச்செல்வி அழகப்பனை தொடர்பு கொள்ளாமல் விலகி சென்று உள்ளார்.

இந்தநிலையில் அழகப்பன், கலைச்செல்வியின் செல்போன் எண்ணுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளா‌ர். ஆனால் அந்த எண் எப்போதும் பிசியாக இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அழகப்பன் நேற்று முன்தினம் கலைச்செல்வியை பெருமானூர் ஓடைக்கு அழைத்து வந்துள்ளா‌ர்.

அ‌ப்போது, கலைச்செல்வியிடம் எப்போதுமே உன்னுடைய செல்போன் பிசியாக இருக்கிறதே? வேறு யாருடன் தொடர்பு வைத்து உள்ளாய்? என கேட்டா‌ர் அழக‌ப்ப‌ன். இதனால் அவர்கள் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் மாறி மாறி தாக்கி உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அழகப்பன் கலைச்செல்வியை அவரது தாலி கயிற்றாலேயே இறுக்கி கொலை செய்துள்ளதாக போலீஸ் வாக்குமூலத்தில் அழகப்பன் தெரிவித்துள்ளா‌ர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மருமக‌ளி‌ன் வா‌யி‌ல் ஆ‌சி‌ட் ஊ‌ற்‌றி கொலை செய்த கொடூர மாமியார்!
» ஆங்கிலத்தை கொலை செய்த முதல் தமிழ் பாடல் ‘WHY THIS KOLAVERI DI’
» மகளை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை! Pics
» தகாத உறவால் பிறந்த குழந்தையை கொலை செய்த பெண் கைது!
» தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து கணவனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum