தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏ.ஆர்.ரகுமானை புரிந்துகொள்வது கடினம்

Go down

ஏ.ஆர்.ரகுமானை புரிந்துகொள்வது கடினம்  Empty ஏ.ஆர்.ரகுமானை புரிந்துகொள்வது கடினம்

Post  ishwarya Wed Mar 13, 2013 4:35 pm

சென்னை, : மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மனோகர் பிரசாத், மணிரத்னம் தயாரிக்கும் படம், ‘கடல்’. ஒளிப்பதிவு, ராஜீவ் மேனன். இசை,

ஏ.ஆர்.ரகுமான். பாடல்கள்: வைரமுத்து, மதன் கார்க்கி. கதை, வசனம்: ஜெயமோகன். திரைக்கதை எழுதி மணிரத்னம் இயக்குகிறார். இதில்

ஹீரோவாக நடிக்கும் தன் மகன் கவுதமை, கார்த்திக் அறிமுகம் செய்தார். ஹீரோயினாக நடிக்கும் ராதாவின் மகள் துளசியை மணிரத்னம் அறிமுகம்

செய்தார். பிறகு அவர் பேசியதாவது:
20 வருடங்களாக நானும், ரகுமானும் பணிபுரிகிறோம். எங்களுக்குள் பல ஒற்றுமைகள் இருந்தாலும், அடுத்து அவர் என்ன செய்வார்? என்ன டியூன்

போடுவார் என்பதை உடனே புரிந்துகொள்ள முடியாது. விமானத்தில் இருந்து இறங்கியவுடன் ஒரு டியூன் தருவார். அது நடுவானில் உருவானதாகச்

சொல்வார். ‘கடல்’ படத்தில் அவரும், வைரமுத்துவும் இணைந்து கொடுத்துள்ள பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. ‘கடல்’ கதைக்குப் பொருத்தமான

நாயகனை தேடினேன். அப்போது கார்த்திக் மகன் கவுதம் கிடைத்தார். நாயகிக்காக காத்திருந்தபோது, பாரதிராஜா ஏற்கனவே போட்டிருந்த வழி

நினைவுக்கு வந்தது. ராதா வீட்டுக்கு சென்று, துளசியைப் பார்த்தேன். முதல் பார்வையிலேயே அசர வைத்தார். கேமரா பயமின்றி நடித்தார். நான்

கேட்டுக்கொண்டதற்காக அர்ஜுன், அரவிந்த்சாமி இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இவ்வாறு மணிரத்னம் பேசினார்.
முன்னதாக படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை, ஏ.ஆர்.ரகுமான் பியானோவில் வாசித்தார். அரவிந்த்சாமி, வைரமுத்து, மதன் கார்க்கி, சாருஹாசன்,

சுகாசினி, லஷ்மி மஞ்சு கலந்துகொண்டனர். இந்த படத்தை சன் ஸ்ரீ கார்ப்பரேஷன் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum