தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெரிந்ததில் தெரியாதது..

Go down

தெரிந்ததில் தெரியாதது.. Empty தெரிந்ததில் தெரியாதது..

Post  birundha Thu Jan 17, 2013 1:35 pm

ஊருக்கு இளைத்தவன் (எளியவன் ) பிள்ளையார்
கோயில் ஆண்டி..


இப்போதும் தமிழகத்தில்
எளிமை என்பது ஏழ்மை என்றே பொருள்
கொள்ளப்படுகிறது..

விநாயகர் என்பவர் மிகவும்
எளிமையானவர்..
மற்றவை எல்லாம் பெரிய பெரிய
கோபுரங்களும் பெரிய மூல விக்ரகங்களையும்
கொண்டு மிகவும் பணக்கார கோயிலாக விளங்கும்..

ஆனால் பிள்ளையார் கோயில்களைப் பாருங்கள்..
சிறிய சன்னிதானம் மட்டுமே கொண்ட கோயிலாக விளங்கும்..
அல்லது,
ஏற்கெனவே உள்ள மற்ற கோயில்களில் ஓர் அறை பிள்ளையாருக்காக ஒதுக்கப் பட்டிருக்கும்..

பிள்ளையாருக்கென தனியாக எல்லாம் கொண்ட பெரிய
கோயில்கள் இல்லை...

அப்படிப்பட்ட எளிமையே உருவான
பிள்ளையாரின்,
கோயில் ஆண்டி எப்படி இருப்பார்..?

கண்டிப்பாக பிள்ளையார் போன்றே மிகவும் எளிமையாக
இருக்க வேண்டும்..

அதாவது மற்ற கோயில்
ஆண்டிகளை விடவும்..

சரி..
ஆண்டி எப்படி இருப்பார்..?

மக்களைவிடவும் மிக எளிமையாக இருந்தாக வேண்டும்..!

சரிதானே..?
ஆக,
பிள்ளையார் கோயிலின் ஆண்டி என்பவர்
மிகவும் எளிமை மற்ற எல்லோரை விடவும்..!

இங்கு எளிமை என்பது இளைத்தவன்
என்ற கொள்ளப்பட்டது வட்டார வழக்கில்..!

மற்றபடி உடலுக்கும் ஆண்டிக்கும் சம்பந்தமில்லை..

அதே போல ஊருக்கு இளிச்சவாயன் புள்ளையார் கோயில்
ஆண்டி என்றும் சிலர் சொல்வதுண்டு..

இந்த இளிச்சவாயன்
என்பதும் ஆண்டியின் எளிமையைக் குறிக்கிறது..!

ஆக,
மற்ற எல்லாரைவிடவும் எளிமையாக
இருப்பதை இளைத்தவன் என்றும் இளிச்சவாயன் என்றும் நம்
மக்கள் பேச்சுத்தமிழால் மாற்றிவிட்டார்கள்..!
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum