தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி காரைக்குடியில் வக்கீல்கள் இன்று உண்ணாவிரதம்: மாணவர்கள் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பு

Go down

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி காரைக்குடியில் வக்கீல்கள் இன்று உண்ணாவிரதம்: மாணவர்கள் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பு Empty இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி காரைக்குடியில் வக்கீல்கள் இன்று உண்ணாவிரதம்: மாணவர்கள் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பு

Post  meenu Wed Mar 13, 2013 1:00 pm


இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள், தமிழகம் முழுவதும் போராட்டத்தில் இறங்கி உள்ளன.

காரைக்குடியில், வக்கீல்கள் சங்கம் சார்பில் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. கோர்ட்டு முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் ரமணன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பஞ்சு, வக்கீல்கள் முருகானந்தம், இளங்கோ, பிரகாஷ், கமல் தயாளன் உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.

காரைக்குடி அரசு கலைக் கல்லூரி முன்பு மாணவர்கள் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்தது. சென்னை லயோலா கல்லூரி மாணவர் காரல் மார்க்ஸ், அழகப்பா கலைக்கல்லூரி மாணவர் விக்னேஷ், அழகப்பா பல் கலைக்கழக மாணவர்கள் சுரேந்திரங், பிரதீப் உள்பட 5 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள் உண்ணாவிரதம்
» புதுக்கோட்டை கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்
» இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்த இந்தியா: ஆம்னஸ்டி சாடல்’
» அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்குமா இந்தியா? - இன்று தெரியும்!
» அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்: ராஜபட்சே உருவபொம்மை எரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum