தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இதய தான கதையில் நடித்தது ஏன்? : சரத்குமார் பேட்டி

Go down

இதய தான கதையில் நடித்தது ஏன்? : சரத்குமார் பேட்டி  Empty இதய தான கதையில் நடித்தது ஏன்? : சரத்குமார் பேட்டி

Post  ishwarya Tue Mar 12, 2013 5:02 pm

‘இதயதான கதையில் நடித்தது ஏன்?’ என்றதற்கு பதில் அளித்தார் சரத்குமார். சன் பிக்சர்ஸ் வழங்க, ஐ பிக்சர்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் சார்பில் ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் படம் ‘சென்னையில் ஒரு நாள்’. சரத்குமார், ராதிகா, விஜயகுமார், சேரன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஷாகித் காதர் இயக்கம். இதுபற்றி சரத்குமார் கூறியதாவது: டிராபிக் என்ற படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. நிறைய விருதுகள் பெற்றது. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார் கமல்ஹாசன். இந்தியில் அஜய் தேவ்கன் ரீமேக் செய்கிறார். கன்னடத்திலும் ரீமேக் ஆகிறது.

தமிழில் நாங்கள் ரீமேக் செய்கிறோம். விபத்தொன்றில் மூளை சாவு அடைந்த பிறகு தனது இதயத்தை வேறு ஒருவருக்கு தானம் செய்து மக்கள் மனதை நெகிழ வைத்த ஹிதேந்திரன் வாழ்க்கைதான் இப்படம். இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்து 4 மணி நேரத்துக்கு பிறகு மற்றொருவருக்கு பொருத்த வேண்டும். சென்னையில் இருந்து வேலூர் செல்ல இரண்டரை மணி நேரம் போதும். போக்குவரத்து நெரிசல்களை மீறி அந்த இதயத்தை எப்படி கொண்டு சென்று உரிய நேரத்தில் ஒப்படைக்கிறார்கள் என்ற பரபரப்பு இருக்கையின் நுனிக்கு வரவழைக்கும். இப்படத்தின் பாடல் வெளியிட்டுக்கு ஹிதேந்திரன் பெற்றோரை அழைக்க இருக்கிறோம்.
இவ்வாறு சரத்குமார் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி
» ஹாலிவுட் படங்களில் நடிப்பேன்: சரத்குமார் சிறப்பு பேட்டி…!
» வில்லன்களுடன் சண்டையிட்டு நடித்தது திகில் அனுபவம்: திரிஷா
» ரஜினியுடன் நடித்தது வாழ்நாள் பெருமை – ஐஸ்வர்யா ராய்
»  விளம்பர படத்தில் அம்மாவுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி – திரிஷா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum