தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியாவில் மீண்டும் ஜேம்ஸ் பாண்ட் "

Go down

இந்தியாவில் மீண்டும் ஜேம்ஸ் பாண்ட் " Empty இந்தியாவில் மீண்டும் ஜேம்ஸ் பாண்ட் "

Post  meenu Mon Mar 11, 2013 4:41 pm

உலகளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் ஜேம்ஸ் பாண்ட் படத் தொடரின் அடுத்த படத்தின் சில பகுதிகள் இந்தியாவில் படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான இந்திய அரசின் அனுமதி தங்களுக்கு கிடைத்துள்ளதாக படத் தயாரிப்பாளர்களின் பிரதிநிதி ஒருவர் பிபிசியிடம் உறுதிபடுத்தியுள்ளார்.

இதுவரை பெயரிடப்படாத இந்தப் படத்தை மும்பை, டில்லி, கோவா ஆகிய இடங்களில் படப்படிப்பை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் படவரிசையில் இந்தப் படம் 23 ஆவது படமாக இருக்கும். இதில் டானியல் க்ரெய்க் மீண்டும் துப்பறியும் நிபுணர் 007 ஆக மீண்டும் நடிக்கிறார்.

இது அவர் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் மூன்றாவது படமாகும். முன்னதாக காஸினோ ரோயல் மற்றும் குவாண்டம் ஆஃப் சொலஸ் ஆகிய இரு படங்களிலும் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார்.

தென் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் இந்தப் புதிய படத்தின் படப்படிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் 9.11.2012 அன்று திரைக்கு வருகிறது.

புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தை சாம் மெண்டிஸ் இயக்குகிறார்.
சாலை நெரிசல்கள் இடம்பெறும்
ஜேம்ஸ் பாண்ட் முத்திரை

ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை குறிக்கும் 007 முத்திரை

இந்தியாவின் சாலைகளையும், நெரிசல் மிகுந்த சந்துகளையும் இந்தப் படத்தில் கொண்டுவர அதன் இயக்குநர் திட்டமிட்டுள்ளதாக, தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த பர்வேஷ் ஷானி தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனநெருக்கடி மிகுந்த ஒரு அங்காடிப் பகுதியிலும், டில்லிப் பகுதியில் குப்பை கூளங்கள் நிறைந்த ஒரு கடைவீதிப் பகுதியிலும் படப்பிடிப்பு இடம்பெறக் கூடும் என்றும் நம்பப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய படத்தின் ஒரு பகுதியை இந்திய ரயில் ஒன்றில் படம்பிடிக்க ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியை சந்தித்து படப்பிடிப்பு குழுவினர் அனுமதி கோரியுள்ளனர்.

இந்திய மண்ணில் தயாரிக்கப்படும் இரண்டாவது ஜேம்ஸ் பாண்ட் படமாக இது இருக்கும். முன்னதாக 1983 ஆம் ஆண்டு ஆக்டோபுஸி திரைப்படத்தின் பல பகுதிகள் உதய்பூர் அரண்மனையில் படம்பிடிக்கப்பட்டன.

அந்தப் படத்தில் ரோஜர் மூர் ஜேம்ஸ் பாண்டாக நடித்தார். அவருடன் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் மற்றும் நடிகர் கபீர் பேடி ஆகியோர் நடித்திருந்தனர்.

அண்மைக் காலங்களில் பல வெளிநாட்டு திரைப்படங்கள் இந்தியாவில் படமாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 2008 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம் டாக் மில்லினர் படம் அதில் முக்கியமானது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum