தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேரம்: இலங்கையின் நிஷாந்த ஃபெர்ணாண்டோ உலக சாம்பியன்

Go down

கேரம்: இலங்கையின் நிஷாந்த ஃபெர்ணாண்டோ உலக சாம்பியன் Empty கேரம்: இலங்கையின் நிஷாந்த ஃபெர்ணாண்டோ உலக சாம்பியன்

Post  meenu Mon Mar 11, 2013 12:31 pm

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடந்து முடிந்துள்ள கேரம் உலகக் கோப்பை போட்டியில் தனி நபர் உலக சாம்பியன் பட்டத்தை இலங்கை வீரர் நிஷாந்த ஃபெர்ணாண்டோ வென்றுள்ளார்.

16 நாடுகள் கலந்துகொண்ட இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவைத் தவிர்த்து அனைத்து பிரிவுகளிலும் இந்திய வீரர்கள் முதலிடத்தில் வந்துள்ளனர்.
தொடர்புடைய விடயங்கள்

விளையாட்டு

கொழும்பு கலதாரி விடுதியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பாரதிதாசனை 25/4, 25/10 என்ற நேர் செட் கணக்கில் நிஷாந்த வீழ்த்தினார்.

இலங்கையின் தேசிய சாம்பியனாகவும் இருந்துவருகின்ற நிஷாந்த ஃபெர்ணாண்டோ இந்த பந்தயத்தில் மிகச் சிறப்பாக விளையாடினார்.

எதிராளிக்கு வாய்ப்பு கொடுக்காமல் தான் போடவேண்டிய காய்கள் அனைத்தையும் ஒரே தடவையில் போட்டுவிடும் ஸ்லாம் சாதனையை இந்தப் போட்டியில் அவர் ஏழு முறை செய்துள்ளார்.

தனது அரையிறுதிப் போட்டியில் இந்தியத் தரவரிசையில் மூன்றாவது இடத்திலுள்ள ஸ்ரீநிவாஸை நிஷாந்த வீழ்த்தினார்.

உரிய உதவிகள் கிடைத்தால் எதிர்காலத்திலும் தன்னால் சாதிக்க முடியும் என்று நிஷாந்த நம்பிக்கை தெரிவித்தார்.

"இப்போதுகூட எனக்கு வருமானம் தேடித்தரக்கூடிய ஒரு வேலை இல்லை. பள்ளிக்கூடங்களூக்கு சென்று மாணவர்களுக்கு கேரம் பயிற்சி வழங்குவதில் கிடைக்கின்ற வருவாய் மூலமும் நண்பர்களின் உதவிகள் மூலமுமாகத்தான் எனது வாழ்க்கை செலவினங்களை ஈடுசெய்துவருகிறேன். நிலையான வருமானத்தை தரக்கூடிய ஒரு எனக்கு ஒரு வேலையும் கிடைத்து, பயிற்சிக்கான ஒத்துழைப்பும் கிடைத்தால் எதிர்காலத்திலும் என்னால் பெரும் வெற்றிகளை ஈட்ட முடியும்."
பாரதிதாசன்

இந்திய வீரர் பாரதிதான் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் தோற்றாலும், இதுநாள் வரை உலக சாம்பியனாக இருந்துவந்த இந்தியாவின் யோகேஷ் பரதேஷியை அரையிறுதியில் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்லாம் சாதனையை இந்தப் பந்தயத்தில் ஐந்து தடவை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா சாதனை

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யோகேஷ் பரதேஷி-பிரகாஷ் கெய்க்வாட் ஜோடி இந்தியாவின் பாரதிதாசன்-ஸ்ரீநிவாஸ் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் போட்டிகளை எடுத்துக்கொண்டால் தனிநபர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரஷ்மி குமாரி உலக சாம்பியன் பட்டம் வென்றார். இரண்டாவது இடத்தில் வந்தது இந்தியாவின் இளவழகி ஆவார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரஷ்மி குமாரி-இளவழகி ஜோடி இலங்கையின் யஷிகா ரஹுபத்தா - மதுஷிகா காஞ்சனமாலா ஜோடியை வீழித்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது

இந்த உலக சாம்பியன்ஷிப் பந்தயத்தில் இந்தியா மிக அதிகமான பட்டங்களை வென்றுள்ளது.

நாடுகளின் அணிகள் இடையிலான போட்டிகளை எடுத்துக்கொண்டாலும் ஆடவர் பிரிவிலும் மகளிர் பிரிவிலும் இலங்கையின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளை வீழ்த்தி இந்திய வீரர்களே சாம்பியன் பட்டம் வென்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum