தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்பு செலுத்துவது போன்ற பக்தி வேறில்லை

Go down

 அன்பு செலுத்துவது போன்ற பக்தி வேறில்லை  Empty அன்பு செலுத்துவது போன்ற பக்தி வேறில்லை

Post  meenu Sat Mar 09, 2013 2:53 pm

ஆழமில்லாத குளத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரைக் குடிக்க வேண்டுமானால், அதைக் கலக்காமல் மெதுவாக மேல் தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். கலக்கி விட்டால் அடியிலுள்ள சேறு மேலே கிளம்பித் தண்ணீர் முழுவதையும் அசுத்தமாக்கி விடும். அதைப்போல நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டுமானால் திடமான நம்பிக்கை கொண்டு, பக்தி மார்க்கத்தில் தெளிவாக செல்ல வேண்டும். பயன்படாத வீண் விவாதங்களில் ஈடுபட்டு சக்தியை வீணாக்காதிருக்க வேண்டும். ‘‘உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர், இயேசுவை அணுகி, ‘போதகரே, ஒருவர் மகப்பேறின்றி தம் மனைவியை விட்டுவிட்டு இறந்து போனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழி மரபு உருவாக்க வேண்டுமென்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார்.

சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இருந்தார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது. ஏழு பேருக்கும் மகப்பேறு இல்லாமல் போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அவர்கள் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்? ஏனெனில், எழுவரும் அவரை மனைவி யாகக் கொண்டிருந்தனரே!’ என்று கேட்டார்.
அதற்கு இயேசு, ‘உங்களுக்கு மறைநூல் தெரியாது; கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை. மாறாக அவர்கள் விண்ணகத் தூதரைப் போல் இருப்பார்கள். இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்ததில்லையா?

ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே என்று கடவுள் அவரிடம் சொன்னாரே! அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று கூறினார். இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக்கண்ட மறைநூல் அறிஞர் ஒருவர், அவரை அணுகி வந்து, ‘அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?’ என்று கேட்டார். அதற்கு இயேசு, ‘கடவுள் என்பவர் நம் ஆண்டவரே. உன் முழு இருதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக என்பது முதன்மையான கட்டளை. உன்மீது நீ அன்பு கூறுவதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூறுவாயாக என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை’ என்றார்.

அதற்கு மறைநூல் அறி ஞர் அவரிடம், ‘நன்று போதகரே, கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இருதயத் தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும் தன்னிடம் அன்பு கொள்வதுபோல் அடுத்திருப்பவரிடமும் அன்பு செலுத்துவது என்பது, எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது’ என்று கூறினார். அவர் அறிவுத் திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ‘நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை’ என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை. ’’ (மாற்கு 12: 18-34) ஒரு விமானத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளைக்காரப் பெண், ஒரு ஆப்பிரிக்கர் பக்கத்தில் அமர்த்தி வைக்கப்பட்டார். இதைப்பொறுக்க முடியாத அப்பெண்மணி விமானப் பணிப்பெண்ணை அழைத்தார்.

‘‘என்ன வேண்டும் மேடம்?’’ என்று பணிப்பெண் கேட்டார். ‘‘உனக்குக் கண் தெரியவில்லை? இப்படிப்பட்ட இழிவான ஒரு வகுப்பைச் சேர்ந்தவருடன் நான் எப்படி பயணம் செய்ய முடியும்?’’ என்று அந்தப் பெண்மணி கேட்டார். ‘‘கொஞ்சம் பொறுமையாக இருங்கள் மேடம். எல்லா இருக்கைகளும் நிறைந்து விட்டன. நான் ஏதாவது செய்ய முடியுமா என்று பார்த்து வருகிறேன்’’ என்று பணிப்பெண் கூறிச் சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்த அவர், ‘‘நான் கூறியதுபோலவே எல்லா இருக்கைகளும் நிரம்பி விட்டன. எக்கா னமி வகுப்பும் பிஸினஸ் வகுப்பும் நிரம்பிவிட்டன. அதிர்ஷ்டவசமாக முதல் வகுப்பில் மட்டும் ஒரு இருக்கை உள்ளது. பொதுவாக எக்கானமி வகுப்பில் உள்ளவரை முதல் வகுப்புக்கு மாற்ற முடியாது. ஆனால் நான் கேப்டனிடம் விளக்கிக் கூறினேன். அவர் இப்படிப்பட்ட ஒரு இழிவான மனிதருடன் பய ணம் செய்வது கடினம் என்று ஒத்துக் கொண்டார்’’ என்றாள்.

முகம் மலாந்த வெள்ளைக்காரப் பெண்ணை சட்டை செய்யாமல், ஆப்பிரிக்க மனிதர் பக்கம் திரும்பிய பணிப்பெண், ‘‘ஆகவே நீங்கள் உடனே உங் கள் லக்கேஜை எடுத்துக்கொண்டு என்னோடு முதல் வகுப்பிற்கு வாருங்கள்’’ என்றார். அதுவரை நடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் இருந்த மற்ற பய ணிகள் மகிழ்ந்து எழுந்து நின்று கை தட்டினார்கள். இயற்கையின் எந்தப் படைப்பையும் இழிவாக நினைப்பவரே இழிவானவர் ஆவார். முழு நினைவோடு செய்யப்படும் செயல்களுக்கு எல்லாம் வேண்டிய மனோதர்மம் ஆழ்மனத்தில்தான் சேகரித்து வைக்கப்படுகிறது. நாம் கேட்பது, பார்ப்பது, நினைப்பது, உணர்வது எல்லாம் இங்குதான் நிலைத்த நினைவுகளாகச் சேகரித்து வைக்கப்படுகின்றன. இதில் ஒரே ஒரு குறைபாடு என்ன வென்றால், உண்மைகளின் நியாயத்தோடு, வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு, பொறாமை முதலிய குப்பைகளும் சேர்ந்து விடுகின்றன.

இவை பெரும் கலவரங்களைத் தூண்டுகின்றன. ஒரு சிலர் வழக்கமாகவே எதிர்மறை உணர்வுகளைச் சேகரித்துக்கொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் இந்த எதிர்மறை உணர்வுகள் மனத்தில் பளிச்சிடும் பொழுது உடனே அது ஆழ்மனத்தில் சென்று உறைந்துகொள்கிறது. இதைப் பற்றிய முழு உணர்வு இருக்க வேண்டும் என்பதுகூட அவசியமில்லை. உள்ளே உறையும் உணர்வுகள் தலை தூக்கவே செய்யும். முழு நினைவு கொண்ட பகு திக்கு அவ்வப்போது வந்து அலை அலையாகப் பரவி வாழ்க்கையை நோகடிக்கும். மனம் அலை பாயும்.

இதை எப்படி சமாளிப்பது?

ஆழ்மனத்திற்கு நேர்மறையான கட்டளைகளை இடுவோம். அவை வலிமை கொண்ட கட்டளைகளாக இருக்கட்டும். மெதுவாக நாள் செல்லச் செல்ல ஆழ்மனம் தூய்மை அடையும். நேர்மறை என்பது என்றைக்கும் எதிர்மறை உணர்வுகளை வெல்லும் என்பதை நினைவில் வைப்போம். நம்முடைய முழு நினைவுப் பகுதி எப்பொழுதும் கவனத்துடன் இருந்து நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் கண்காணிக்க வேண்டும். நேர்மறை எண்ணங் களுக்கே இடம் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு சம்பவத்தின்போதும் ஒவ்வொரு பிரச்னையின் போதும், ஒவ்வொரு துரதிஷ்டத்தின் போதும் நேர்மறையான உணர்வுகளையே கொள்ள வேண் டும். அப்படியே கணித்து அவற்றின் ஆழத்தில் ஏதாவது கற்க வேண்டிய பாடங்கள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். ஏதாவது நல்லது இ ருக்கிறதா என்று ஆராய வேண்டும். முழு நிறைவு கொண்ட மனத்தின் மேற்பரப்பு என்பது ஒரு காவலாளியைப்போல. ஆழ்மனம் என்பது எண்ணங் களின் சேர்க்கை. காவலாளி தூங்கி விட்டால் எது வேண்டுமானாலும் உள்ளே நுழையும். கவனமுள்ள காவலாளி அனைத்தையும் கண்காணிப்பார்; விருப்பப்படக்கூடிய உணர்வுகளையே உள்ளே நுழைய விடுவார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பட்டுப் போன்ற சருமம் பள பளக்க ….
» சொற்களைத் தவிர வேறில்லை
» 'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'கந்தகோட்டை' போன்ற படங்களில் நடித்த நகுல் தற்போது 'வல்லினம்', 'அமளிதுமளி', 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். சந்தானம் காமெடி கேரக்
» பஞ்சு போன்ற பாத அழகு பெற…..!
» ஆப்பிள் போன்ற கன்னங்கள் வேண்டுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum