தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மணிரத்னம் மீது கமிஷன‌ரிடம் புகார்

Go down

மணிரத்னம் மீது கமிஷன‌ரிடம் புகார் Empty மணிரத்னம் மீது கமிஷன‌ரிடம் புகார்

Post  ishwarya Sat Mar 02, 2013 5:39 pm

கடல் படத்தை வாங்கி வெளியிட்டதில் 17 கோடி நஷ்டம், அதனை மணிரத்னத்திடமிருந்து வசூலித்துத் தரும்படி கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்திருக்கிறார் விநியோகஸ்தர் மன்னன்.

லாபம் வந்தால் சத்தமில்லாமல் அனுபவிப்பதும், நஷ்டம் வந்தால் தயா‌ரிப்பாளர்கள், நடிகர்களின் வீடுகளை முற்றுகையிடுவதும் விநியோகஸ்தர்களின் வழக்கமான செயல்பாடுகள். கடல் படத்தில் விஜய், அ‌‌ஜீத் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தால் கதையே வேறு. அவர்கள் வீட்டுமுன் போராட்டம் நடத்தி, அவர்களின் அடுத்தப் படத்தை வாங்க மாட்டோம் என்று மிரட்டி நஷ்டஈடை கறந்துவிட்டிருப்பார்கள். கௌதம் அறிமுக நடிகர். அதனால் மணிரத்னத்தை பிடித்திருக்கிறார்கள். தவிர அவர்தான் படத்தின் தயா‌ரிப்பாளர்.

ஏற்கனவே மணிரத்னத்தின் அலுவலகத்தை விநியோகஸ்தர்கள் முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து, படத்தை ஒரு வருடத்துக்கு முன்பே ஜெமினி நிறுவனத்துக்கு விற்றுவிட்டேன், உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மணிரத்னத்திடமிருந்து க்ளீன் அறிக்கை வெளிவந்தது. அவ‌ரிடமிருந்து பைசா பெயராது என்ற நிலையில் கமிஷன‌ரிடம் புகார் தந்திருக்கிறார் விநியோகஸ்தர் மன்னன்.

20 கோடிக்கு கடலை இவர் வாங்கியிருக்கிறார். ஆனால் வசூலித்தது 3 கோடியாம். 17 கோடி ரூபாயை மணிரத்னத்திடமிருந்து பெற்றுத் தரும்படி கேட்டிருக்கிறார்.

பம்பாய், ரோஜா படங்களில் வி‌நியோகஸ்தர்கள் லம்பாக சம்பாதித்தனர். அதில் இந்த நஷ்டக்கணக்கை கழித்துவிட வேண்டியதுதான். அதுதானே முறை?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum