தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நெல்லுக்கு நல்ல விலை இல்லை' - மீள்குடியேறிய விவசாயிகள்

Go down

நெல்லுக்கு நல்ல விலை இல்லை' - மீள்குடியேறிய விவசாயிகள் Empty நெல்லுக்கு நல்ல விலை இல்லை' - மீள்குடியேறிய விவசாயிகள்

Post  meenu Fri Mar 01, 2013 6:13 pm


நீரில் மூழ்கிய நெற்பயிர்

நீரில் மூழ்கிய நெற்பயிர்

இலங்கையின் வடக்கே நெல் அறுவடை ஆரம்பமாகிவிட்ட போதிலும் விளைந்த நெல்லை நியாய விலைக்கு சந்தைப்படுத்த முடியாதிருப்பதாக மீள்குடியேற்றப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



தனியார் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கே நெல்லைக் கொள்வனவு செய்வதனால் தாங்கள் பெரும் நட்டத்திற்கு உள்ளாகியிருப்பதாக கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் கூறுகின்றனர்.

''இன்று வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்திருப்பதனால் விவசாயத் தொழிலாளிகளுக்கு கூடிய சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. எரிபொருளின் விலையேற்றம் காரணமாக நெல் அறுவடை செய்கின்ற இயந்திரத்தின் நாட்கூலியும் அதிகரித்திருக்கின்றது. ஆனால் நெல் விளைச்சலும் குறைவு, விலையும் குறைவு. அத்துடன் காலம் தப்பிய மழை காரணமாக விளைந்த நெற்கதிர்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் விவசாயிகள் பெரும் சிரமங்களுக்கும் கஸ்டத்திற்கும் ஆளாகியிருக்கின்றார்கள் என்கிறார்'' கணேசபுரம் விவசாய அமைப்பின் தலைவர் வெற்றிநாதன் பாலரட்னம் அவர்கள்.
நெற்சந்தைப்படுத்தும் சபையின் அறிவித்தல்

நெற்சந்தைப்படுத்தும் சபையின் அறிவித்தல்



நல்ல விலைக்கு நெல் தங்களுக்கு விற்பனை செய்யப்படலாம் எற்று நெற் சந்தைப்படுத்தும் சபையினர் பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ள போதிலும் நெல் கொள்வனவு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் நெல் அறுவடை செய்யப்படும் காலங்களில் வழமையாகவே நெல்லை விற்பனை செய்வது தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம் எனக் கூறும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரன், நெற்சந்தைப்படுத்தும் சபை மற்றும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக நியாய விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, நெல் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற பணத்தை வேறு தேவைகளுக்கு சில பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் பயன்படுத்தியிருப்பதாகக் குற்றம் சாட்டப்படுவது பற்றி கருத்து வெளியிட்ட அவர், அத்தகைய சங்கங்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துச் செயற்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படுகின்ற முழு நெல்லையும் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்வது கடினம் என தெரிவித்த அவர், தனியார் வியாபாரிகள் நியாயமான விலையைப் பேணுவதற்காகவே அரசாங்கம் உத்தரவாத விலையை நிர்ணயம் செய்கின்றது என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum