கடலில் தத்தளித்த பர்மிய நாட்டவர்கள் இலங்கையில் மீட்பு
Page 1 of 1
கடலில் தத்தளித்த பர்மிய நாட்டவர்கள் இலங்கையில் மீட்பு
இலங்கையின் கடற்பரப்புக்கு அப்பால் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தொகுதி பர்மியப் பிரஜைகளை மீட்டுள்ளதாக கடற்படையினர் கூறுகிறார்கள்.
கிழக்கு மாகாணம் பொத்துவில் பிரதேசம் சங்கமன் கந்தையிலிருந்து 250 கடற்மைல்களுக்கு அப்பால் நிர்க்கதியான நிலையில் சிலர் படகொன்றில் தத்தளிப்பதாக கிடைத்த தகவலையடுத்தே அவர்கள், இன்று சனிக்கிழமையன்று(16.2.13) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் கூறுகிறார்கள்.
காப்பாற்றப்பட்டுள்ள அனைத்து பர்மிய பிரஜைகளும் ஆண்கள் என்று கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அவர்கள் பயணித்த மரப்படகொன்று உடைந்து கடலில் மூழ்கும் நிலையில் இருந்த போது, தமக்கு தகவல் கிடைத்ததை அடுத்தே கடற்படையினர் அங்கு விரைந்ததாக அவர் கூறினார்.
மீட்கப்பட்டவர்களில் 31 வயது வந்த ஆண்கள் என்றும் மற்றொருவர் சிறுவன் எனவும் கடற்படையினரின் இணையதளம் கூறுகிறது.
அவர்கள் பல நாட்களாக கடலில் இருந்ததால் உடலில் நீர்ச்சத்து குறைந்து போன நிலையில் காணப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையினரின் கப்பல் ஒன்றில் நிலப்பரப்புக்கு கொண்டுவரப்படுவதாகவும் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இவர்களில் நான்கு பேரின் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகவும் கூறும் கடற்படைப் பேச்சாளர், அவர்கள் அனைவரும் காலி துறைமுகத்துக்கு கொண்டுவரப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த மாதம் 3 ஆம் தேதியும் இதேபோல ஒரு தொகுதியினர் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
வங்கதேசம் மற்றும் பர்மாவைச் சேர்ந்த அவர்கள் தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணம் பொத்துவில் பிரதேசம் சங்கமன் கந்தையிலிருந்து 250 கடற்மைல்களுக்கு அப்பால் நிர்க்கதியான நிலையில் சிலர் படகொன்றில் தத்தளிப்பதாக கிடைத்த தகவலையடுத்தே அவர்கள், இன்று சனிக்கிழமையன்று(16.2.13) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் கூறுகிறார்கள்.
காப்பாற்றப்பட்டுள்ள அனைத்து பர்மிய பிரஜைகளும் ஆண்கள் என்று கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அவர்கள் பயணித்த மரப்படகொன்று உடைந்து கடலில் மூழ்கும் நிலையில் இருந்த போது, தமக்கு தகவல் கிடைத்ததை அடுத்தே கடற்படையினர் அங்கு விரைந்ததாக அவர் கூறினார்.
மீட்கப்பட்டவர்களில் 31 வயது வந்த ஆண்கள் என்றும் மற்றொருவர் சிறுவன் எனவும் கடற்படையினரின் இணையதளம் கூறுகிறது.
அவர்கள் பல நாட்களாக கடலில் இருந்ததால் உடலில் நீர்ச்சத்து குறைந்து போன நிலையில் காணப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையினரின் கப்பல் ஒன்றில் நிலப்பரப்புக்கு கொண்டுவரப்படுவதாகவும் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இவர்களில் நான்கு பேரின் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகவும் கூறும் கடற்படைப் பேச்சாளர், அவர்கள் அனைவரும் காலி துறைமுகத்துக்கு கொண்டுவரப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த மாதம் 3 ஆம் தேதியும் இதேபோல ஒரு தொகுதியினர் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
வங்கதேசம் மற்றும் பர்மாவைச் சேர்ந்த அவர்கள் தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குளச்சல் கடலில் தத்தளித்த படகு… கடலில் கவிழ்ந்த தனுஷ்,அப்புக்குட்டி
» கடலில் தத்தளித்த வங்கதேச, பர்மீய பிரஜைகளை இலங்கை கடற்படை மீட்டது
» அல்ஜீரியா: இறுதி மீட்பு நடவடிக்கையின் போது பலர் பலி
» காலியில் வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்பு
» ஒரு தலைக்காதல் விவகாரம்! கடத்தப்பட்ட மாணவி பொலிஸாரால் மீட்பு!
» கடலில் தத்தளித்த வங்கதேச, பர்மீய பிரஜைகளை இலங்கை கடற்படை மீட்டது
» அல்ஜீரியா: இறுதி மீட்பு நடவடிக்கையின் போது பலர் பலி
» காலியில் வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்பு
» ஒரு தலைக்காதல் விவகாரம்! கடத்தப்பட்ட மாணவி பொலிஸாரால் மீட்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum