தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அடை செய்முறை

Go down

அடை செய்முறை Empty அடை செய்முறை

Post  meenu Fri Mar 01, 2013 1:29 pm

முருங்கை இலை அடை
தேவை


முருங்கைக்கீரை – 1/4 கப்
புழுங்கலரிசி – 2 கப்
துவரம்பருப்பு – 1/4 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
வெங்காயம் – 1
காய்ந்த மிளகாய் – 8
பெருங்காயம் – ருசிக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 டே.ஸ்பூன்

செய்முறை
அரிசியை 3 மணி நேரமும், பருப்பை 1/2 மணி நேரமும் தனியாக ஊற வைக்கவும்.
இவற்றோடு, மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம் இவற்றை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
உப்பும், முருங்கைக்கீரையும் சேர்க்கவும்.
முன்பு சொல்லியது போல நான்-ஸ்டிக் தோசைக் கல்லை காய வைத்து எண்ணெய் விட்டு அடை சுடவும்.

பப்பாளிக்காய் அடை
தேவை


பப்பாளிக்காய் – 21/2 கப் (துருவியது)
கோதுமை மாவு – 1/2 கப்
அரிசி மாவு – சிறிதளவு

பச்சைமிளகாய் விழுது – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லித்தழை – 2 டே.ஸ்பூன்

செய்முறை
துருவிய பப்பாளிக்காயை பிழிந்து அதிக ஈரத்தை எடுத்து விட்டு அதோடு உப்பு மிளகாய் விழுது, கொத்தமல்லித் தழையைச் சேர்த்துக் கலக்கவும்.
அதோடு பிடிக்கும் வரை கோதுமை மாவு, அரிசி மாவு சேர்த்துக் கலக்கவும்.
சிறிய அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் சிறிதளவே எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

சுரைக்காய் வடை
தேவை


சுரைக்காய் – 21/2 கப் (துருவியது)
கோதுமை மாவு – 1/2 கப்
அரிசி மாவு – சிறிதளவு
பச்சைமிளகாய் விழுது – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லித்தழை – 2 டே.ஸ்பூன்

செய்முறை
துருவிய சுரைக்காயை பிழிந்து அதிக ஈரத்தை எடுத்து விட்டு அதோடு உப்பு மிளகாய் விழுது, கொத்தமல்லித் தழையைச் சேர்த்துக் கலக்கவும்.
அதோடு பிடிக்கும் வரை கோதுமை மாவு, அரிசி மாவு சேர்த்துக் கலக்கவும்.
சிறிய அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் சிறிதளவே எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

முழு உளுந்து அடை
தேவை


புழுங்கலரிசி – 21/2 கப்
துவரம்பருப்பு – 2 கப்
கருப்பு முழு உளுந்து – 1 கப்
சிகப்பு மிளகாய் – 10
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 11/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 டே.ஸ்பூன்
கொத்தமல்லி – 1 கப் (நறுக்கியது)

செய்முறை
அரிசியையும், துவரம் பருப்பையும் ஒன்றாகக் கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
கிரைண்டரில் அரைக்கும் போது இதோடு மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
முழு உளுந்தை ஊற வைக்காமல், கழுவின உடனே தனியாக கரகரப்பாக அரைத்து பிறகு உப்பு, சேர்த்து ஒரு நிமிடம் அரைத்த அரிசி விழுதோடு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
அவரவர் விருப்பப்படி கீரையை கலந்து அடையாக சுட்டு சாப்பிடலாம்.
கீரை சேர்க்காமல் தோசை போல ஊற்றியும் சாப்பிடலாம்.

கேழ்வரகு காரடை
தேவை


கேழ்வரகு மாவு – 2 கப்
வேக வைத்த காரமணிப்பயறு – 1/4 கப்
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் – சிறிதளவு
சுடுதண்ணீர் – மாவு பிசைய

செய்முறை
கேழ்வரகு மாவை லேசாக வெறும் வாணலியில் சூடாக்கவும்.
அடுப்பில் இருந்து இறக்கி அதோடு, வேக வைத்த காராமணி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து விட்டு போதிய சுடுதண்ணீர் விட்டுப் பிசையவும்.
சிறிய உருண்டைகளாக உருட்டி 1/4 அங்குல கனத்திற்கு அடை போல சிறிய வாழை இலைகளில் தட்டவும்.
இலையோடு அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

வெந்தய அடை
தேவை


வெந்தயக் கீரை – 2 கட்டு
பச்சரிசி – 2 கப்
புழுங்கலரிசி – 1 கப்
கடலைப்பருப்பு – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 11/2 டே.ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை
வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உளுத்தம் பருப்பை தனியாக ஊற வைக்கவும்.
இரண்டு வித அரிசியையும் ஒன்றாகக் கலந்து கடலைப்பருப்பையும் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுத்தம் பருப்பை நன்றாக நுரைக்க அரைத்துக் கொள்ளவும். மற்ற ஊற வைத்த பொருட்களையும், மிளகாய், உப்பு பெருங்காயம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். இரண்டு மாவுகளையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். பின் வெந்தயக் கீரையையும் சேர்த்து அடைகளாக சுட்டு எடுக்கவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum