தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூட்டுவலி – உணவு கட்டுப்பாடு

Go down

மூட்டுவலி – உணவு கட்டுப்பாடு Empty மூட்டுவலி – உணவு கட்டுப்பாடு

Post  meenu Thu Feb 28, 2013 2:33 pm

வயிற்று கோளாறுகள் மூட்டுவலி, மூட்டுப்பிடிப்பு – இவற்றுக்கு முக்கிய காரணம். எனவே லகுவான, கொழுப்பில்லாத, உணவுகளை உண்பது சிறந்தது. மூட்டுவலிக்கு ஏற்ற உணவுகள் தனியே தரப்பட்டுள்ளன.
இதர குறிப்புகள்
1. மூட்டுகளில் வலியை உண்டாக்கும் வேலை, செயல்களை பயிற்சிகள் இவற்றை தவிர்க்கவும்.
2. சரியாக, உட்கார வேண்டும்; மற்றும் நிற்க வேண்டும்.
3. உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் எடையை குறைக்கவும்.
4. ‘கெட்டியான’ படுக்கையில் படுக்கவும்.
5. மலச்சிக்கல், அஜீர்ணம் வராமல் பார்த்துக் கொள்ளவும்.
6. ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அதுவும் நோய் தீவிரமாக தாக்கும் போது முழு ஒய்வு தேவை.
உடற்பயிற்சி, யோகா
ஆர்த்தரைடீஸ் வியாதிகள் வராமல் தடுக்க உடற்பயிற்சியும், யோகாவும் சிறந்தவை. ஆனால் ருமாடிஸம் வந்தபின், உடற்பயிற்சி, யோகா, இவற்றை டாக்டரிடம் கலந்தாலோசித்து பின் மேற்கொள்ளவும்.
இதர மருத்துவங்கள்
அலோபதி மருத்துவ முறையிலும் பல மருந்துகள் உள்ளன. இருந்தாலும்
இவற்றில் பல, பக்க விளைவுகளை உண்டாக்கும். அழற்சியை எதிர்க்கும்
மருந்துகளும், கார்டிகோஸ்டீராய்ட் மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. முதல்
வகையை சேர்ந்த மருந்துகள் ஆஸ்பிரின், ஐபூஃப்ரோஃபென் பாராசிடமால்
போன்ற பல மருந்துகள். இவை தவிர “தங்கம்” கலந்த மருந்துகளும்
கொடுக்கப்பட்டு வந்துள்ளன. தங்கம் “இன்ஜெக்ஷன்” ஊசி மூலம் உடலில்
செலுத்தப்படும். இதனால் வாய்புண், அரிப்பு, ரத்த கோளாறுகள், சரும பாதிப்புகள்
இவை உண்டாகும். இந்த தங்க மருந்தின் வியாபார பெயர் மையோக்ரிஸின்
தற்போது இந்த தங்க மருந்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.
சில பரிசோதனைகள்
• ருமாடிக் ஃபேக்டர் டெஸ்ட்
• இரத்தத்தின் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை
• இரத்தத்தின் எரித்ரோசைட் செல்கள் ‘படிவ’ டெஸ்ட்
• ‘சி’ ரீஆக்டிவ் புரதம்
• எக்ஸ்ரே
குறிப்பு
இந்த ருமாடிக் ஃபேக்டர் காணப்பட்டாலும் சிலருக்கு ஆமவாதம்
ஏற்படுவதில்லை.
ஆமவாத தைலம்
தேவையானவை: கோஷ்டம் சுக்கு, வசம்பு, முருங்கை பட்டை, தோல் நீக்கிய பூண்டு, தேவதாரு, வெண்கடுகு – இவை வகைக்கு 18 கிராம் இவற்றை அரைத்தெடுத்து புளிச்சாறு 3 லிட்டர், புளித்த தயிர் 3 லிட்டர், நல்லெண்ணை 11/2 லிட்டர் சேர்த்து காய்ச்சவும். கல்கம் மெழுகுபதத்தில் வரும் போது 1 கிராம் வெள்ளை குங்கிலியத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, இந்த பாத்திரத்திலேயே தைலத்தை வடித்து சேர்த்துக் கொள்ளவும். கலக்கினால் குங்குலியமும் கரைந்து விடும். ஆமவாதத்திற்கும் ஸியாடிகாவுக்கும் இந்த தைலம் வெளிப்பூச்சாக நல்ல பலனளிக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum