2010: இந்தியாவில் புகைப்பிடித்தலால் மரணத்தை தழுபுவர்கள் எண்ணிக்கை 10 லட்சம்
Page 1 of 1
2010: இந்தியாவில் புகைப்பிடித்தலால் மரணத்தை தழுபுவர்கள் எண்ணிக்கை 10 லட்சம்
இந்தியாவில் வரும் 2010 ஆம் ஆண்டில் புகைப் பிடித்தலால் மரணத்தை தழுவுபவர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வரும் 2010 ஆம் ஆண்டில் பத்து லட்சம் பேர் புகைப் பிடித்தலால் வரும் நோயால் மரணமடைவார்கள் என்று கூறப்படுகிறது. வரும் 2010 -ல் மரணத்தை தழுபுபவர்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்ட ஆண்களில் 5 -ல் ஒருவரும், பெண்களில் 20-ல் ஒருவரும் புகைப் பிடிப்பவர்களால் மரணத்தை அடைவார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பீடி புகைக்கும் ஆண்களின் வாழ்நாள் 6 ஆண்டுகளும், பெண்கள் 8 ஆண்டுகளையும் இழப்பதாக தெரியவந்துள்ளது. இதுப்போன்று சிகரெட் புகைக்கும் ஆண்களின் வாழ்நாள் 10 ஆண்டுகள் குறைவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இந்தியாவில் புகைப்பிடிப்பவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வுக்காக 900 களப்பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 2001-03 க்கு இடைப்பட்ட காலத்தில் பலியானவர்களின் மருத்துவ குறிப்புகளை நாடு முழுவதும் உள்ள வீடுகளில் 10 லட்சம் வீடுகளில் இருந்து பெற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த குறிப்புகளில் இறந்துபோன 74,000 இளைஞர்கள் பற்றிய குறிப்புகளும், வாழ்ந்து கட்டுப்பாடுகளுடன் கொண்டிருக்கும் 78,000 பேரின் மருத்துவ குறிப்புகளும் அடங்கும்.
ஆண்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களில் மரணத்தை தழுவியவர்களில் 38 விழுக்காட்டினர் கழலைப் புற்றுநோயாலும், 31 விழுக்காட்டினர் சுவாசக் கோளாறு காரணமாகவும் இறந்துள்ளனர். புகைப் பிடிப்பதால் 2001-03 -க்கு இடைப்பட்ட காலத்தில் மரணமடைந்த 3 ஆயிரத்து 119 பேரில் ஆயிரத்து 174 பேர் கழலைப் புற்று நோயாலும், சுவாசக் கோளாறு காரணமாக மரணத்தை தழுவிய மூவாயிரத்து 487 பேரில் ஆயிரத்து 78 பேர் புகைப் பிடித்தல் பழக்கத்தால் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த காலக் கட்டத்தில் மரணம் அடைந்தவர்களில் 20 விழுக்காட்டினர் நாளங்கள் செயல் இழத்தலாலும், 32 விழுக்காட்டினர் புற்று நோயாலும், 23 விழுக்காட்டினர் மற்ற நோய்களாலும் மரணத்தை தழுவியுள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ளவர்களை விட மிகவும் காலம் கடந்த நிலையில் தான் இந்தியாவில் புகைப் பிடிக்கத் தொடங்குவதாகவும், குறைந்த அளவிலேயே புகைப் பிடிப்பதும் ஆச்சரியமான விசயம் என்று இந்த ஆய்வின் தலைவரான பேராசிரியர் பிரபாத் ஜா கூறியுள்ளார்.
கனடா நாட்டின் டொராண்டோ பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட புனித மைக்கேல் மருத்துவ மனையில் உள்ள உலக சுகாதார ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக பிரபாத் ஜா பணியாற்றி வருகின்றார். புகைப் பிடித்தலால் புற்றுநோய், நுரையிரல் நோய்கள் மூலம் மட்டுமல்ல இதய நோய், கழலைப் புற்று நோய் மூலமும் மரணம் நிகழும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார்.
இந்தியாவில் 12 கோடி புகைப் பிடிப்பவர்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு ஆண்களும், 5 விழுக்காட்டினர் பெண்களும் உள்ளனர். 30 முதல் 69 வயதுக்குள் மரணத்தை அடைபவர்கள் எண்ணிக்கையில் புகைப் பிடிக்காதவர்கள் 41 விழுக்காடு என்றால், புகைப் பிடிப்பவர்கள் 61 விழுக்காடாக உள்ளனர். பெண்களில் புகைப் பிடிப்பவர்கள் 62 விழுக்காடும், புகைப் பிடிக்காதவர்கள் 38 விழுக்காட்டினராகவும் உள்ளனர் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வரும் 2010 ஆம் ஆண்டில் பத்து லட்சம் பேர் புகைப் பிடித்தலால் வரும் நோயால் மரணமடைவார்கள் என்று கூறப்படுகிறது. வரும் 2010 -ல் மரணத்தை தழுபுபவர்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்ட ஆண்களில் 5 -ல் ஒருவரும், பெண்களில் 20-ல் ஒருவரும் புகைப் பிடிப்பவர்களால் மரணத்தை அடைவார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பீடி புகைக்கும் ஆண்களின் வாழ்நாள் 6 ஆண்டுகளும், பெண்கள் 8 ஆண்டுகளையும் இழப்பதாக தெரியவந்துள்ளது. இதுப்போன்று சிகரெட் புகைக்கும் ஆண்களின் வாழ்நாள் 10 ஆண்டுகள் குறைவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இந்தியாவில் புகைப்பிடிப்பவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வுக்காக 900 களப்பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 2001-03 க்கு இடைப்பட்ட காலத்தில் பலியானவர்களின் மருத்துவ குறிப்புகளை நாடு முழுவதும் உள்ள வீடுகளில் 10 லட்சம் வீடுகளில் இருந்து பெற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த குறிப்புகளில் இறந்துபோன 74,000 இளைஞர்கள் பற்றிய குறிப்புகளும், வாழ்ந்து கட்டுப்பாடுகளுடன் கொண்டிருக்கும் 78,000 பேரின் மருத்துவ குறிப்புகளும் அடங்கும்.
ஆண்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களில் மரணத்தை தழுவியவர்களில் 38 விழுக்காட்டினர் கழலைப் புற்றுநோயாலும், 31 விழுக்காட்டினர் சுவாசக் கோளாறு காரணமாகவும் இறந்துள்ளனர். புகைப் பிடிப்பதால் 2001-03 -க்கு இடைப்பட்ட காலத்தில் மரணமடைந்த 3 ஆயிரத்து 119 பேரில் ஆயிரத்து 174 பேர் கழலைப் புற்று நோயாலும், சுவாசக் கோளாறு காரணமாக மரணத்தை தழுவிய மூவாயிரத்து 487 பேரில் ஆயிரத்து 78 பேர் புகைப் பிடித்தல் பழக்கத்தால் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த காலக் கட்டத்தில் மரணம் அடைந்தவர்களில் 20 விழுக்காட்டினர் நாளங்கள் செயல் இழத்தலாலும், 32 விழுக்காட்டினர் புற்று நோயாலும், 23 விழுக்காட்டினர் மற்ற நோய்களாலும் மரணத்தை தழுவியுள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ளவர்களை விட மிகவும் காலம் கடந்த நிலையில் தான் இந்தியாவில் புகைப் பிடிக்கத் தொடங்குவதாகவும், குறைந்த அளவிலேயே புகைப் பிடிப்பதும் ஆச்சரியமான விசயம் என்று இந்த ஆய்வின் தலைவரான பேராசிரியர் பிரபாத் ஜா கூறியுள்ளார்.
கனடா நாட்டின் டொராண்டோ பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட புனித மைக்கேல் மருத்துவ மனையில் உள்ள உலக சுகாதார ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக பிரபாத் ஜா பணியாற்றி வருகின்றார். புகைப் பிடித்தலால் புற்றுநோய், நுரையிரல் நோய்கள் மூலம் மட்டுமல்ல இதய நோய், கழலைப் புற்று நோய் மூலமும் மரணம் நிகழும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார்.
இந்தியாவில் 12 கோடி புகைப் பிடிப்பவர்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு ஆண்களும், 5 விழுக்காட்டினர் பெண்களும் உள்ளனர். 30 முதல் 69 வயதுக்குள் மரணத்தை அடைபவர்கள் எண்ணிக்கையில் புகைப் பிடிக்காதவர்கள் 41 விழுக்காடு என்றால், புகைப் பிடிப்பவர்கள் 61 விழுக்காடாக உள்ளனர். பெண்களில் புகைப் பிடிப்பவர்கள் 62 விழுக்காடும், புகைப் பிடிக்காதவர்கள் 38 விழுக்காட்டினராகவும் உள்ளனர் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புகைபிடித்தால் தோல் நோய் வரும் : ஆய்வு!
» புகைபிடித்தால் தோல் நோய் வரும் : ஆய்வு!
» இந்தியாவில் அதிகரிக்கும் ஒவ்வாமை
» உயரம் வாழ்க்கையின் தரத்தை பாதிக்கிறது : ஆய்வு!
» உயரம் வாழ்க்கையின் தரத்தை பாதிக்கிறது : ஆய்வு
» புகைபிடித்தால் தோல் நோய் வரும் : ஆய்வு!
» இந்தியாவில் அதிகரிக்கும் ஒவ்வாமை
» உயரம் வாழ்க்கையின் தரத்தை பாதிக்கிறது : ஆய்வு!
» உயரம் வாழ்க்கையின் தரத்தை பாதிக்கிறது : ஆய்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum