தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூலம் குறைய

Go down

மூலம் குறைய  Empty மூலம் குறைய

Post  oviya Tue Feb 26, 2013 9:20 pm

தேவையான பொருட்கள்:

காட்டுக் கரணை-100 கிராம்
கறிக் கரணை-100கிராம்
பிரண்டை-25கிராம்
புளியமடல்-25கிராம்
நுணா இலை-25கிராம்
கொடி வேலி வேரின் பட்டை-25கிராம்
அரிசி திப்பிலி-25கிராம்
நிலவேம்பு-25கிராம்
அதிமதுரம்-25கிராம்
சீரகம்-25கிராம்
பெருங்காயம்-25கிராம்
வெட்பாலையரிசி-25கிராம்
விளாவரிசி-25கிராம்
வெள்ளைப்பூண்டு-25கிராம்
அதிவிடயம்-25கிராம்
மிளகு-25கிராம்
கடுகு-25கிராம்
கடுகுரோகணி-25கிராம்
கருஞ்சீரகம் – 25 கிராம்
நிலஆவாரை -25 கிராம்
இந்துப்பு – 25 கிராம்

செய்முறை:

காட்டுக் கரணை, கறிக் கரணை இரண்டையும் தோல் நீக்கி ஈர்க்கு கனத்தில் சிறுதுண்டுகளாக வெட்டி நிழலில் உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும். வெள்ளைப்பூண்டு இந்துப்பு நீங்கலாக மற்ற மருந்துச் சரக்குகளை நிழலில் நன்கு உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும்.
வெள்ளைப் பூண்டை பசும் பாலில் அவித்து நிழலில் உலர்த்த வேண்டும். எல்லா மருந்துச் சரக்குகளையும் மீண்டும் உரலில் போட்டு இடித்து வடிகட்டி அதன் பின் இந்துப்பை இடித்துப் போட்டு 72 மணி நேரம் காற்றுப் புகாமல் வைத்திருந்து மருந்தைப் பத்திரப்படுத்தவேண்டும்.

உபயோகிக்கும் முறை:

காலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன் 6 கிராம் தூளுடன் 1 தேக்கரண்டி வெல்லம் கலந்து பிசைந்து மருந்தை உட் கொண்டு சிறிது பசும் பால் அல்லது வெந்நீர் குடிக்கவேண்டும். இதுபோல் மாலை 6 மணிக்கும் மருந்துண்ணவேண்டும். 40 நாட்கள் மருந்தை சாப்பிட வேண்டும்.

தீரும் நோய்கள்:

உள் மூலம், இரத்த மூலம், வயிறு தொடர்பான நோய்கள் குறையும்.

உண்ணவேண்டிய உணவு:

கீரை வகைகள், பழங்கள், தண்டு வகைகள், புழுங்கலரிசி, மிளகு, சீரகம், பூண்டு, இளங்காய்கள், எலுமிச்சம்பழம், பசு மோர், பசும் பால் ஆகிய உணவு வகைகள் சாப்பிடலாம்.

பத்தியம்:

எண்ணெய்ப் பண்டங்கள், வற்றல்கள், மீன் வகைகள், மிளகாய், தயிர், மது வகைகள் ஆகியவைகளை சாப்பிட கூடாது.

குறிப்பு – 1

மருந்துண்ணப் போகும் முதல் நாள் சுகபேதி அருந்துவது முறையாகும். மருந்துண்ணும் நாட்களில் இரண்டு மூன்று நாட்களுக்கு பேதியாக மலங்கழிந்தால் மருந்துடன் தேனை மட்டும் சேர்த்துக் கொள்ளவேண்டும். மருந்துடன் மலக்கட்டு ஏற்படாது. கணைச் சூட்டுக்காரர்கள் சிலருக்குமலக்கட்டு ஏற்படலாம். ஏற்பட்டால் உணவில் பசு நெய்யைச் சோ்த்துக் கொள்ளவேண்டும்.

குறிப்பு -2

50 வயதிற்கு மேற்பட்டவர்கள் 80 நாட்கள் வரை மருந்தைத் தொடர்ந்து சாப்பிடலாம். எந்த தீங்கும் ஏற்படாது.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 கிராம் மருந்துடன் 2 தேக்கரண்டி பசு நெய்யைக் கலந்து சாப்பிடலாம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum