தட்சிண அஹோபிலம் பெரும்பாக்கம்
Page 1 of 1
தட்சிண அஹோபிலம் பெரும்பாக்கம்
விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் ஏழாவது கிலோ மீட்டரில் உள்ள அழகிய கிராமம்தான் பெரும்பாக்கம். இக்கோவிலில் கூடுதல் விசேஷம் என்ன வென்றால் சுவாமியின் திருமார்பில் லட்சுமி நரசிம்மரின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இவரை தரிசிப்பதே பெரும் பாக்கியமென்பதால் `பாக்கியபுரி' என்று அழைக்கப்படுகிறது. சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் பெரும்பாக்கம் கிராமத்தில் ஒரு விஷ்ணு பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் கனவில் பெருமாள் தோன்றி, தான் `தொரை மானியம்' என்ற இடத்தில் பூமிக்கடியில் மறைந்து கிடப்பதாகச் சொன்னார்.
மறுநாள் ஊர் மக்களுடன் சேர்ந்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டியபோது கண்ணைக் கவரும் அழகிய திருக்கோலத்தில் பெருமாள் விக்கிரகம் கிடைத்தது. திருமலை வேங்கடவனும் காஞ்சி வரதரும் இணைந்த கோலம். வலக்கரம் வரதராஜரைப் போல வரங்களைத் தருகிறது.
இடக்கரம் வேங்கடவரைப்போல் ஆறுதல் தரக்கூடிய ஹஸ்தமாக உள்ளது. திருமார்பில் லட்சுமி நரசிம்மரின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருந்தது. கூடவே ஸ்ரீதேவி, பூதேவி எம்பெருமானுக்கு அழகான கோயிலை அமைத்து ஸ்ரீதேவி பூதேவியுடன் பிரதிஷ்டை செய்து கி.பி. 1605 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தனர்.
அஹோபில மடத்து ஜீயர்கள் பலர் இத்தலத்துக்கு விஜயம் செய்து மங்களாசாசனம் செய்துள்ளனர். அப்படி வந்து பல நாள்கள் தங்குவதுண்டு. இம்மாதிரி அவர்கள் தங்கும்போது அஹாபிலத்து லட்சுமி நரசிம்மரையும் கொண்டு வருவர்.
இத்தகையை அஹோபில மடத்து தொடர்புகளினால் தட்சிண அஹோபிலம் என்று இக்கிராமத்து தலம் அழைக்கப்படுகிறது. வடக்கத்திய அஹோபிலத்துக்கான பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் பெரும்பாக்கம் வந்து தரிசிப்பர்.
போக்குவரத்து வசதி:
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோயிலுக்கு செல்லலாம். சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து விழுப்புரம் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோயிலுக்கு செல்லலாம்.
இவரை தரிசிப்பதே பெரும் பாக்கியமென்பதால் `பாக்கியபுரி' என்று அழைக்கப்படுகிறது. சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் பெரும்பாக்கம் கிராமத்தில் ஒரு விஷ்ணு பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் கனவில் பெருமாள் தோன்றி, தான் `தொரை மானியம்' என்ற இடத்தில் பூமிக்கடியில் மறைந்து கிடப்பதாகச் சொன்னார்.
மறுநாள் ஊர் மக்களுடன் சேர்ந்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டியபோது கண்ணைக் கவரும் அழகிய திருக்கோலத்தில் பெருமாள் விக்கிரகம் கிடைத்தது. திருமலை வேங்கடவனும் காஞ்சி வரதரும் இணைந்த கோலம். வலக்கரம் வரதராஜரைப் போல வரங்களைத் தருகிறது.
இடக்கரம் வேங்கடவரைப்போல் ஆறுதல் தரக்கூடிய ஹஸ்தமாக உள்ளது. திருமார்பில் லட்சுமி நரசிம்மரின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருந்தது. கூடவே ஸ்ரீதேவி, பூதேவி எம்பெருமானுக்கு அழகான கோயிலை அமைத்து ஸ்ரீதேவி பூதேவியுடன் பிரதிஷ்டை செய்து கி.பி. 1605 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தனர்.
அஹோபில மடத்து ஜீயர்கள் பலர் இத்தலத்துக்கு விஜயம் செய்து மங்களாசாசனம் செய்துள்ளனர். அப்படி வந்து பல நாள்கள் தங்குவதுண்டு. இம்மாதிரி அவர்கள் தங்கும்போது அஹாபிலத்து லட்சுமி நரசிம்மரையும் கொண்டு வருவர்.
இத்தகையை அஹோபில மடத்து தொடர்புகளினால் தட்சிண அஹோபிலம் என்று இக்கிராமத்து தலம் அழைக்கப்படுகிறது. வடக்கத்திய அஹோபிலத்துக்கான பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் பெரும்பாக்கம் வந்து தரிசிப்பர்.
போக்குவரத்து வசதி:
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோயிலுக்கு செல்லலாம். சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து விழுப்புரம் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோயிலுக்கு செல்லலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தட்சிண அஹோபிலம் பெரும்பாக்கம்
» அஹோபிலம் அஹோபிலம்
» தட்சிண பத்ராச்சலம் திருத்தலம்
» அஹோபிலம் அஹோபிலம்
» தட்சிண பத்ராச்சலம் திருத்தலம்
» அஹோபிலம் அஹோபிலம்
» தட்சிண பத்ராச்சலம் திருத்தலம்
» அஹோபிலம் அஹோபிலம்
» தட்சிண பத்ராச்சலம் திருத்தலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum