தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரத்னமங்கலம் குபேரன் கோவில்

Go down

ரத்னமங்கலம் குபேரன் கோவில் Empty ரத்னமங்கலம் குபேரன் கோவில்

Post  meenu Mon Jan 14, 2013 3:06 pm

திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதியரை அவர்களது உறவினர்கள் விருந்துக்கு அழைப்பது வழக்கம். ஒரு ஊரில் திருக்கல்யாணம் செய்து கொள்ளும் தெய்வத்தையே தங்களது வீடுகளுக்கு அழைத்து விருந்து வைக்கிறார்கள் பக்தர்கள். சென்னை வண்டலூர் அருகே அமைந்துள்ள ரத்னமங்கலம் குபேரன் கோவில்தான் அது.

ஸ்தல வரலாறு:

மதுரை மீனாட்சி, திருத்தணி சுப்பிரமணியசுவாமி, திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கல்யாண வரிசையில் குபேரனின் திருக்கல்யாணமும் சிறப்புமிக்கது. திருப்பதி வெங்கடாஜலபதியின் திருமணத்திற்கு கடன் கொடுத்தவர்தான் குபேர பகவான்.

நாம் திருப்பதி உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் எல்லாம் குபேரனுக்கு வெங்கடாஜலபதி செலுத்தும் வட்டி மட்டுமே என்பது ஐதீகம். கலியுகம் எப்போது முடியப்போகிறதோ, அந்த தருணத்தில் குபேரனிடம் தனது கல்யாணத்திற்கு வாங்கிய கடனை வெங்கடாஜலபதி அடைத்து விடுவதாகவும் நம்பப்படுகிறது.

திருக்கல்யாணம்:

பெருமாளின் திருமணத்திற்கு கடன் கொடுத்த குபேரன் தனிக்கோவில் கொண்டுள்ள ரத்னமங்கலத்தில் ஆண்டுதோறும் குபேரன்-சித்ரலேகா திருக்கல்யாணம் சிறப்பாக நடை பெறுவது வழக்கம். இந்த தெய்வ திருக்கல்யாணம் வித்தியாசமான முறையில் நடத்தப்படுகிறது. நாம் திருமணத்திற்கு அச்சடிக்கும் அழைப்பிதழ் போலவே இக்கோவில் திருக்கல்யாண வைபவத்திற்கும் அழைப்பிதழ் அச்சடிக்கிறார்கள்.

`ஸ்ரீமகாலட்சுமி தாயாரின் முன்னிலையில், பிரம்மாவின் பேரனும், விச்ரஸவசின் குமாரனுமான குபேர பகவான் என்கிற மணமகனுக்கும், ரிதி என்கிற சித்ரலேகா என்கிற மணமகளுக்கும் திருமணம் செய்ய எல்லா வல்ல இறைவனால் நிச்சயிக்கப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து மாலை மற்றும் மலர் கிளி வரவழைக்கப்பட்டு நடத்தப்படும் திருமணத்தில் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து, குபேர சம்பத்துடன் கூடிய இறையருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்...' என்று நீள்கிறது அந்த அழைப்பிதழ்.

இந்த ஆண்டுக்கான இக்கோவில் குபேரனின் திருக்கல்யாணம் கடந்த 3-ந் தேதி நடந்தது. தற்போது, லட்சுமி குபேர உற்சவ மூர்த்தி கல்யாண விருந்துக்காக பக்தர்களின் இல்லங்களுக்கு, அவர்களது அழைப்பின் பேரில் எழுந்தருளி வருகிறார். திருக்கல்யாணம் முடிந்த ஒரு மண்டலம் வரை அவர் அவ்வாறு எழுந்தருள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதியிலிருந்தும் போக்குவரத்து வசதி உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum