பெற்றோர்களின் அறியாமைக்கு பலியாகும் குழந்தைகள்!
Page 1 of 1
பெற்றோர்களின் அறியாமைக்கு பலியாகும் குழந்தைகள்!
குணப்படுத்தக்கூடிய
நோய்களுக்குக் கூட இந்தியாவில் கடந்த 2005 ஆம் ஆண்டில் சுமார் 15 லட்சம்
குழந்தைகள் பலியாகி உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்திய பதிவாளர் ஜெனரலுடன் - Registrar General of India (RGI) மற்றும் உலக மருத்துவ ஆராய்ச்சி மையம் - Centre for Global Health Research (CGHR) மற்றும் உலகளாவிய பொது சுகாதார நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டு மேற்கூறிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள்
வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் வீடுகளில் நிகழும்
பெரும்பான்மையான இறப்புகள் மருத்துவ கவனிப்பின்றியே நடப்பதாகவும், இதில்
ஐந்து குணப்படுத்தக்கூடிய நோய்களால் மட்டும் 2005 ஆம் ஆண்டில் 15 லட்சம்
குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக
குழந்தைகள் இறப்புக்கு நிமோனியா, டயோரியா, பிறப்பின்போது ஏற்படுகிற
பிரச்னை, சுவாச பிரச்சனைகள், மற்றும் தொற்று நோய்கள் போன்றவை காரணமாக
அமைந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சுமார் 63 லட்சம் மக்களிடம், அவர்களது வீடுகளுக்கே சென்று நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
மேலும்
பாலின மற்றும் பிராந்தியம் போன்ற காரணங்களின் அடிப்படையிலும் குழந்தைகள்
இறப்பு விகிதத்தில் வித்தியாசம் காணப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
1 முதல்
50 மாதங்கள் வரையிலான குழந்தைகளில், தென்னிந்தியாவில் நிமோனியாவால்
இறக்கும் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமான
பெண் குழந்தைகள் இதே நோயய்க்கு மத்திய இந்தியா பகுதியில் இறக்கிறார்கள்.
இதேப்போன்றுதான்
மேற்குறிப்பிட்ட மற்ற நோய்களினால் ஏற்படும் இறப்பு விகிதமும்
காணப்படுவதாக அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு
குணப்படுத்தகூடிய நோய்களுக்கு கூட தங்களது குழந்தைகளை பறிகொடுக்கிற
பெற்றோர்கள் உள்ளார்கள் என்றால், அதற்கு அறியாமை மற்றும்
கல்வியறிவின்மைதான் காரணம் என்பதல்லாமால் வேறு என்ன இருக்க முடியும்?
நோய்களுக்குக் கூட இந்தியாவில் கடந்த 2005 ஆம் ஆண்டில் சுமார் 15 லட்சம்
குழந்தைகள் பலியாகி உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்திய பதிவாளர் ஜெனரலுடன் - Registrar General of India (RGI) மற்றும் உலக மருத்துவ ஆராய்ச்சி மையம் - Centre for Global Health Research (CGHR) மற்றும் உலகளாவிய பொது சுகாதார நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டு மேற்கூறிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள்
வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் வீடுகளில் நிகழும்
பெரும்பான்மையான இறப்புகள் மருத்துவ கவனிப்பின்றியே நடப்பதாகவும், இதில்
ஐந்து குணப்படுத்தக்கூடிய நோய்களால் மட்டும் 2005 ஆம் ஆண்டில் 15 லட்சம்
குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக
குழந்தைகள் இறப்புக்கு நிமோனியா, டயோரியா, பிறப்பின்போது ஏற்படுகிற
பிரச்னை, சுவாச பிரச்சனைகள், மற்றும் தொற்று நோய்கள் போன்றவை காரணமாக
அமைந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சுமார் 63 லட்சம் மக்களிடம், அவர்களது வீடுகளுக்கே சென்று நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
மேலும்
பாலின மற்றும் பிராந்தியம் போன்ற காரணங்களின் அடிப்படையிலும் குழந்தைகள்
இறப்பு விகிதத்தில் வித்தியாசம் காணப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
1 முதல்
50 மாதங்கள் வரையிலான குழந்தைகளில், தென்னிந்தியாவில் நிமோனியாவால்
இறக்கும் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமான
பெண் குழந்தைகள் இதே நோயய்க்கு மத்திய இந்தியா பகுதியில் இறக்கிறார்கள்.
இதேப்போன்றுதான்
மேற்குறிப்பிட்ட மற்ற நோய்களினால் ஏற்படும் இறப்பு விகிதமும்
காணப்படுவதாக அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு
குணப்படுத்தகூடிய நோய்களுக்கு கூட தங்களது குழந்தைகளை பறிகொடுக்கிற
பெற்றோர்கள் உள்ளார்கள் என்றால், அதற்கு அறியாமை மற்றும்
கல்வியறிவின்மைதான் காரணம் என்பதல்லாமால் வேறு என்ன இருக்க முடியும்?
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெற்றோர்களின் அறியாமைக்கு பலியாகும் குழந்தைகள்!
» குழந்தைகள் அம்மாவை கண்டது அழுகையை நிறுத்துவது ஏன்?குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களை
» குழந்தைகளின் மனநல/உடல்நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு
» குழந்தைகள் குழந்தைகள்
» உறைநிலைப்படுத்தி உருவாகும் குழந்தைகள்
» குழந்தைகள் அம்மாவை கண்டது அழுகையை நிறுத்துவது ஏன்?குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களை
» குழந்தைகளின் மனநல/உடல்நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு
» குழந்தைகள் குழந்தைகள்
» உறைநிலைப்படுத்தி உருவாகும் குழந்தைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum