உறையூர் வெக்காளியம்மன் கோவில்
Page 1 of 1
உறையூர் வெக்காளியம்மன் கோவில்
திருச்சி நகரின் மையப் பகுதியில் உறையூர் வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த தலத்தில் சரமா முனிவர் நாக லோகத்தில் உள்ள செவ்வந்தி மலரைக் கொண்டு வந்து பூவுலகில் பயிரிட்டு அருள்மிகு தாயுமானவருக்குப் பூசை செய்து வந்தார். அந்த மலர்களை பார்த்த பராந்தகசோழனின் சேவகர்கள் அதை பறித்து சென்று அரசனின் மனைவியிடம் கொடுத்தனர்.
பூசைக்கு மலர் இல்லாததை அறிந்த முனிவர் அரசனிடம் முறையிட்டார். கோபமுற்ற இறைவன் மணல் காற்றை வீசச் செய்தார். அப்பகுதி மக்கள் வருந்தி அன்னை வெக்காளியம்மனை வழிபட்டனர். மக்களைக் காக்க மாதா வந்தாள். மணல் காற்று நிறுத்தப்பட்டது. மக்கள் மகிழ்ந்து அன்னையை வழிபட்டனர். இக்கோவிலுக்குக் கூரை இல்லை. மழையில் குளித்து சூரிய ஒளியில் களித்து மக்களுக்கு அருள் புரிகிறாள்.
சாந்த முகம், சதுர்பூஜங்களுடன் வடக்கு நோக்கி உள்ளாள் அலங்கார அபிஷேக காலத்தில் கருமாரி, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி போல் தோற்றமளிப்பாள். தாயை வழிபட வரும் சேய்கள் தங்கள் வேண்டுகோளை ஒரு சீட்டில் எழுதி அவளது திருவடியில் வைத்து வழிபட்டு, எதிர்புறம் அமைந்துள்ள சக்தி சூலத்தில் கட்டிச் செல்வதை காணலாம்.
அந்தத் தாய் அவர்தம் வேண்டுகோளை நிறைவேற்றுவாள். எத்தகைய வேண்டுதலாக இருந்தாலும், சீட்டில் எழுதி சக்தி சூலத்தில் கட்டி விட்டால், நிச்சயம் அந்த வேண்டுதல் நிறைவேறி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த பிரார்த்தனை சீட்டு கட்டி செல்கிறார்கள்.
இத்தலத்தில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது. வெக்காளி அம்மனுக்கு 9 நாட்களும் 9 விதமான அலங்காரம் செய்யப்படும். ஆனால் தனியாக கொலு எதுவும் வைக்க மாட்டார்கள். அதற்கு பதில் தினமும் இரவு 7 மணிக்கு வெக்காளி அம்மன் புறப்பாடு நடைபெறும். கோவில் பிரகாரத்தை அம்மன் சுற்றி வருவாள்.
இந்த காட்சி பிரமிப்பாக இருக்கும். விஜயதசமி தினத்தன்று அம்மன் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெறும். நவராத்திரி நாட்களில் வெக்காளி அம்மனை வழிபட்டால் அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் தகவல்களுக்கு: 0431-2761869 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.
பூசைக்கு மலர் இல்லாததை அறிந்த முனிவர் அரசனிடம் முறையிட்டார். கோபமுற்ற இறைவன் மணல் காற்றை வீசச் செய்தார். அப்பகுதி மக்கள் வருந்தி அன்னை வெக்காளியம்மனை வழிபட்டனர். மக்களைக் காக்க மாதா வந்தாள். மணல் காற்று நிறுத்தப்பட்டது. மக்கள் மகிழ்ந்து அன்னையை வழிபட்டனர். இக்கோவிலுக்குக் கூரை இல்லை. மழையில் குளித்து சூரிய ஒளியில் களித்து மக்களுக்கு அருள் புரிகிறாள்.
சாந்த முகம், சதுர்பூஜங்களுடன் வடக்கு நோக்கி உள்ளாள் அலங்கார அபிஷேக காலத்தில் கருமாரி, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி போல் தோற்றமளிப்பாள். தாயை வழிபட வரும் சேய்கள் தங்கள் வேண்டுகோளை ஒரு சீட்டில் எழுதி அவளது திருவடியில் வைத்து வழிபட்டு, எதிர்புறம் அமைந்துள்ள சக்தி சூலத்தில் கட்டிச் செல்வதை காணலாம்.
அந்தத் தாய் அவர்தம் வேண்டுகோளை நிறைவேற்றுவாள். எத்தகைய வேண்டுதலாக இருந்தாலும், சீட்டில் எழுதி சக்தி சூலத்தில் கட்டி விட்டால், நிச்சயம் அந்த வேண்டுதல் நிறைவேறி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த பிரார்த்தனை சீட்டு கட்டி செல்கிறார்கள்.
இத்தலத்தில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது. வெக்காளி அம்மனுக்கு 9 நாட்களும் 9 விதமான அலங்காரம் செய்யப்படும். ஆனால் தனியாக கொலு எதுவும் வைக்க மாட்டார்கள். அதற்கு பதில் தினமும் இரவு 7 மணிக்கு வெக்காளி அம்மன் புறப்பாடு நடைபெறும். கோவில் பிரகாரத்தை அம்மன் சுற்றி வருவாள்.
இந்த காட்சி பிரமிப்பாக இருக்கும். விஜயதசமி தினத்தன்று அம்மன் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெறும். நவராத்திரி நாட்களில் வெக்காளி அம்மனை வழிபட்டால் அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் தகவல்களுக்கு: 0431-2761869 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கமலவல்லிநாச்சியார் கோயில் - உறையூர்
» கமலவல்லிநாச்சியார் கோயில் - உறையூர்
» கமலவல்லிநாச்சியார் கோயில் - உறையூர்
» திருக்கோஷ்டியூர் கோவில்
» உறையூர் அருள்மிகு செல்லாண்டி அம்மன் ஆலயம்
» கமலவல்லிநாச்சியார் கோயில் - உறையூர்
» கமலவல்லிநாச்சியார் கோயில் - உறையூர்
» திருக்கோஷ்டியூர் கோவில்
» உறையூர் அருள்மிகு செல்லாண்டி அம்மன் ஆலயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum